Don't Miss!
- News நடுவானில் பெங்களூர் விமானத்தை நெருங்கிய எமிரேட்ஸ் விமானம்.. மிக பெரிய விபத்து தவிர்ப்பு! பகீர்
- Automobiles ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
3 காதலிகள்: சமாளிக்க முடியாமல் ஆட்டோ டிரைவரிடம் திருடிய டான்ஸர்
Recommended Video
டெல்லி: டெல்லியில் 3 காதலிகளுக்கு செலவு செய்ய முடியாமல் திணறிய டான்ஸர் ஒருவர் ஆட்டோ டிரைவரின் பணத்தை திருடி போலீசில் சிக்கியுள்ளார்.
டெல்லியை சேர்ந்தவர் ரோஹன் கில்(21). நடன கலைஞர். கோவிந்த்புரி பகுதியில் வசித்து வரும் அவருக்கு 3 காதலிகள். இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு கோவிந்த்புரி சவுக் பகுதியில் சவாரிக்கு வந்த ஆட்டோ டிரைவர் பயணியை இறக்கிவிட்டுவிட்டு பணத்தை எண்ணியுள்ளார்.
அப்பொழுது அங்கு வந்த ரோஹன் ஆட்டோ டிரைவரின் பர்ஸை பறித்துக் கொண்டு ஓடினார். இதை பார்த்த ஆட்டோ டிரைவர் கூச்சலிடவே ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் ரோஹனை விரட்டிப் பிடித்து கைது செய்தனர்.
ரோஹனிடம் இருந்து ஆட்டோ டிரைவரின் பர்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் ரூ. 1,900 ரொக்கம் இருந்தது. விசாரணையில் ரோஹன் கூறியதாவது, எனக்கு 3 காதலிகள் உள்ளனர். அவர்களுக்கு செலவு செய்ய பணம் போதவில்லை. அதனால் திருடத் துவங்கினேன் என்றார்.
கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இதுவரை 4 முறை கைது செய்யப்பட்டுள்ளார் ரோஹன் என்பது குறிப்பிடத்தக்கது.