Don't Miss!
- News கற்பனை செய்யாத விஷயங்கள் இனி நடக்கும்! மோடிக்கு 4 மாநிலங்கள் தரப்போகும் ஷாக்.. என்ன இப்படி சொல்றாரே!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
தர்பார் மாஸாக வந்துள்ளது.. பொங்கலுக்கு வெளியாகிறது.. ரஜினிகாந்த் அதிரடி பேட்டி!
சென்னை: தர்பார் படம் பொங்கலுக்கு வெளியாகிறது என்று நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படப்பிடிப்பு மும்பையிலும், சென்னையிலும் நடந்து வருகிறது. இருவரும் முதல்முறை கூட்டணி சேர்ந்து இருப்பதால் இந்த படம் அதிக கவனம் பெற்றுள்ளது.
தர்பார் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் .கடந்த சில நாட்களுக்கு முன் தர்பார் படத்தின் முதல் போஸ்டர் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது போஸ்டர் இன்று வெளியானது.
முதல் போஸ்டரில் பின்பக்கம் துப்பாக்கிகள், குண்டுகள் இருக்க ரஜினி கெத்தாக நிற்பது போல டிசைன் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று வெளியான இரண்டாவது போஸ்டரில், நடிகர் ரஜினிகாந்த் உடற்பயிற்சி செய்வது போல, பனியனில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.
DarbarSecondLook: வெறித்தனம் ஓவர்லோடட்.. ரசிகர்களை மிரள வைத்த ரஜினி.. வெளியானது தர்பார் செகண்ட் லுக்
இதற்கு இடையில் ரஜினி போலீஸ் உடையில் இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சில வெளியானதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தர்பார் படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், தர்பார் படம் பொங்கலுக்கு வெளியாகிறது. தர்பார் படம் நன்றாக வந்துள்ளது. இந்த படம் மக்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.