Don't Miss!
- Lifestyle திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
தர்பார் பட வசூல் விவகாரம்.. விநியோகஸ்தர்கள் மிரட்டல்.. போலீஸ் பாதுகாப்பை நாடும் ஏ.ஆர். முருகதாஸ்!
Recommended Video
சென்னை: தர்பா படம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக தனது அலுவலகத்துக்கு வந்து தொடர்ந்து மிரட்டல் விடுப்பதாகவும், போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஏ.ஆர். முருகதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜனவரி 9ம் தேதி திரைக்கு வந்த படம் தர்பார்.
தர்பார் படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியதாக லைகா நிறுவனம் 150 கோடி பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷன் என அதிகாரப்பூர்வமாக போஸ்டர் போட்டது.
ஆனால், அதன் பின்னர், தர்பார் வசூல் குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாக வில்லை. இந்நிலையில், தர்பார் படம் மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட்ட நிலையில், தற்போது, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் அலுவலகம் மற்றும் வீட்டை முற்றுகையிட்டு விநியோகஸ்தர்கள் மிரட்டல் விடுத்து வருகின்றனராம்.
இதனால், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் காவல் துறையிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும், முருகதாஸின் மனு மீது காவல் துறை என்ன நடவடிக்கை எடுத்தது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.