Don't Miss!
- News தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள்.. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு
- Finance ரூ.10 லட்சத்திற்கு கீழ் கிடைக்கும் செகண்ட்ஹேண்ட் கார் கார்கள்? உங்களின் சாய்ஸ் எது?
- Sports "ரோஹித் எனக்கு கீழ் ஆடுவது".. எல்லை மீறிவிட்டார் ஹர்திக் பாண்டியா.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- Technology வாரித்தூக்குது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- Automobiles கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஆண்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த 6 விஷயங்களை அவசியம் தெரிஞ்சு வைச்சுக்கணுமாம்...!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
தர்பார் பட வசூல் விவகாரம்.. விநியோகஸ்தர்கள் மிரட்டல்.. போலீஸ் பாதுகாப்பை நாடும் ஏ.ஆர். முருகதாஸ்!
Recommended Video
சென்னை: தர்பா படம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக தனது அலுவலகத்துக்கு வந்து தொடர்ந்து மிரட்டல் விடுப்பதாகவும், போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஏ.ஆர். முருகதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜனவரி 9ம் தேதி திரைக்கு வந்த படம் தர்பார்.
தர்பார் படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியதாக லைகா நிறுவனம் 150 கோடி பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷன் என அதிகாரப்பூர்வமாக போஸ்டர் போட்டது.
ஆனால், அதன் பின்னர், தர்பார் வசூல் குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாக வில்லை. இந்நிலையில், தர்பார் படம் மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட்ட நிலையில், தற்போது, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் அலுவலகம் மற்றும் வீட்டை முற்றுகையிட்டு விநியோகஸ்தர்கள் மிரட்டல் விடுத்து வருகின்றனராம்.
இதனால், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் காவல் துறையிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும், முருகதாஸின் மனு மீது காவல் துறை என்ன நடவடிக்கை எடுத்தது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.