Just In
- 1 hr ago
நாக்கை வெளியில் நீட்டி க்யூட்டான போஸ்.. மனதை பறி கொடுத்த ரசிகர்கள்!
- 1 hr ago
#D43 படக்குழுவில் இணைந்த யூ டியூப் பிரபலம்! தனுஷ் குறித்து நெகிழ்ச்சியான ட்வீட்
- 2 hrs ago
உயிர் வாழணும்னா என் கூட வாங்க.. கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு டெர்மினேட்டர் வசனம் பேசிய அர்னால்டு!
- 2 hrs ago
தொடை தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிக் பாஸ் லாஸ்லியா!
Don't Miss!
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Automobiles
2021 டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.7.99 லட்சம்
- News
சசிகலா சுய நினைவுடன் நன்றாக இருக்கிறார் -விக்டோரியா மருத்துவமனை அறிக்கை
- Sports
நம்பர் 1 டீமை சந்திக்கும் ஈஸ்ட் பெங்கால்.. ஜெயிக்க முடியுமா? சவாலான போட்டி!
- Lifestyle
சுவையான... பன்னீர் போண்டா
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Darbar: மும்பையில் அலப்பறையாக தர்பாரை துவங்கிய ரஜினி

மும்பை: ரஜினிகாந்தின் தர்பார் படத்தின் பூஜை இன்று மும்பையில் நடைபெற்றது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடிக்கும் படத்திற்கு தர்பார் என்று பெயர் வைத்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று வெளியிட்டனர். போஸ்டரிலேயே கதை மும்பையில் தான் நடக்கிறது என்பது தெளிவாகத் தெரிந்தது.

இந்நிலையில் தர்பார் படத்தின் பூஜை இன்று காலை மும்பையில் நடைபெற்றது. முருகதாஸ், ரஜினி, லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரண் ஆகியோர் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
நீண்ட காலம் கழித்து ரஜினியை காக்கிச் சட்டையில் பார்க்கப் போகிறோம். படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி முடிக்கப் போகிறாராம் முருகதாஸ். ரஜினி வரும் 18ம் தேதி மட்டும் மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து வாக்களித்துவிட்டு திரும்பிச் செல்கிறாராம்.

ஸ்டுடியோவில் நடந்த தர்பார் போட்டோஷூட்டின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களே கசிந்துவிட்டன. அதனால் படப்பிடிப்பு தளத்தில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ரஜினி ரசிகர்கள் முருகதாஸுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பதை தவிர கதை பற்றி மூச்சுவிடாமல் இருக்கிறார் முருகதாஸ்.