Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
விக்ரம் மற்றும் பாபி சிம்ஹாவுடன் மோதும் "மெட்ராஸ்" அன்பு
சென்னை: அக்டோபர் 21 ம் தேதி வெளியாகவிருக்கும் டார்லிங் 2 திரைப்படம் அதே நாளில் வெளியாகும் 10 எண்றதுக்குள்ள மட்டும் கோ 2 ஆகிய திரைப்படங்களுடன் மோதவிருக்கிறது.
இதன் மூலம் விக்ரம் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோருடன் நேரடியாக மோதவிருக்கிறார் "மெட்ராஸ்" புகழ் கலையரசன். டார்லிங் 2 படத்தில் கலையரசன் முக்கிய வேடமேற்று நடித்திருக்கிறார்.
10 எண்றதுக்குள்ள, கோ 2 மற்றும் டார்லிங் 2 படங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
டார்லிங்
இந்த வருட ஆரம்பத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படங்களில் ‘டார்லிங்' படமும் ஒன்று. இதில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாகவும் நிக்கி கல்ராணி நாயகியாகவும் நடித்திருந்தார்கள். ஜி.வி.பிரகாஷ் நாயகனாக அறிமுகமான இந்தப்படம் பேயின் ஆதரவால் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது.
டார்லிங் 2
டார்லிங் படத்தின் வெற்றி காரணமாக "மெட்ராஸ்" கலையரசன், ரமீஸ் ராஜா, மாயா, காளி வெங்கட், அர்ஜுன், முனீஸ்காந்த் மற்றும் ஜானி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படத்துக்கு 'டார்லிங் 2' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ‘டார்லிங்' முதல் பாகத்தை தயாரித்த ஞானவேல் ராஜா இந்தப் படத்தை வாங்கி வெளியிடுகிறார். சதீஷ் சந்திரசேகரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்துக்கு முதலில் 'ஜின்' எனப் பெயரிட்டுருந்தனர்.
நகைச்சுவை கலந்து
டார்லிங் 2 இயக்குநர் சதீஷ் சந்திரசேகர் "இரண்டாம் பாகம் என்பது முதல் பாகத்தின் தொடர்ச்சியாகத்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. அதே நடிகரோ, அதே இயக்குனராக இருக்கவும் வேண்டாம். முந்தைய பாகத்தின் கதை கருவை ஒட்டிய கதைதான் இரண்டாவது பாகத்துக்கு மிக முக்கியம். ஐந்து நபர்கள் சுற்றுலா செல்லும் போது, அவர்களுடன் அழையா விருந்தாளியாக வரும் ஒரு ஆவி அவர்களிடையே ஏற்படத்தும் குழப்பத்தை, நகைச்சுவை கலந்த காதலுடன் கொடுத்து இருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.
விக்ரம் மற்றும் பாபி சிம்ஹா
இப்படம் வெளியாகும் அதே தேதியில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்து எண்றதுக்குள்ள' மற்றும் பாபி சிம்ஹாவின் கோ2 ஆகிய 2 படங்களும் வெளியாகின்றன . ‘ஐ' படத்திற்குப் பிறகு விக்ரம் நடிப்பில் இப்படம் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவியிருக்கிறது. 3 படங்களும் ஒரே நாளில் வெளியாவதால் ரசிகர்கள் காந்தி ஜெயந்தியை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
காந்தி ஜெயந்தி எந்த ஹீரோவுக்கு கைகொடுக்கப் போகிறது என்று தெரியவில்லை....