Don't Miss!
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- News நீ ஹெல்ப்பர் கேள்வி கேட்காதே.. அரசு வண்டியில் பீர் குடித்த இபி ஆபிசர்.. மறக்க முடியாத பரிசு..வீடியோ
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பத்திரிகையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டார் விஜய் டிவி டிடி!
சென்னை: செய்தியாளர்கள் பற்றி தவறாகப் பேசியதற்காக மன்னிப்புக் கேட்டார் பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் டிடி எனும் திவ்யதர்ஷினி.
விஜய் டிவியில் டிடி தொகுத்து வழங்கும் காப்பி வித் டிடி நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
அதில் நடிகை கீர்த்தி சுரேஷ் என்னை ரசிக்க வைத்த கிசுகிசு சதிஷ்க்கும் எனக்கு கல்யாணம் என்று வந்த செய்திதான் என்று கூறினார்.
அதற்கு டிடி சொன்ன பதில், செய்தியாளர்களை அவமதிக்கும் வகையில் அமைந்திருந்தது. அந்த கிசுகிசுவை வரவழைக்க சதீஷிடம் ரூ 1000 கேட்டதாக அவர் கூறினார்.
இதற்கு செய்தியாளர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
உடனடியாக அவர் ட்விட்டரில் தனது செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
அதில், "நான் அப்படிச் சொன்னது தமாஷுக்காகத்தான். செய்தியாளர்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவர்களை காயப்படுத்த வேண்டும் என நான் நினைத்ததில்லை. அவர்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.