Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பேச்சுவார்த்தையில் இழுபறி: 9-ம் தேதி வரை படப்பிடிப்பு கிடையாது!
பெப்சி - தயாரிப்பாளர் சங்கம் இடையே சம்பள உயர்வு குறித்து நீடித்து வரும் மோதல் நேற்று முடிவுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி நடக்கவில்லை.
நேற்று இருதரப்புக்கும் இடையில் நடந்த பேச்சு வார்த்தை ஒரு முடிவை எட்டாததால், மீண்டும் 9-ம் தேதி சந்தித்துப் பேசுவதென முடிவு செய்யப்பட்டது. அதுவரை படப்பிடிப்புகள் நடக்காது என்ற நிலையை பெப்சி மேற்கொண்டுள்ளது.
தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் எஸ் ஏ சந்திரசேகரன் தலைமையிலும், பெப்சி பிரதிநிதிகள் இயக்குநர் அமீர் தலைமையிலும் நேற்று பேச்சு நடத்தினர்.
இதுகுறித்து எஸ் ஏ சந்திரசேகரன் கூறுகையில், "தமிழக அரசின் நோக்கம் புரிந்து நாங்கள் சிலவற்றை விட்டுத் தர முன் வந்துள்ளோம். அடுத்த கூட்டத்தில் நல்ல முடிவை எட்டி விடுவோம்," என்றார்.
இயக்குநர் அமீர் கூறுகையில், வரும் பிப்ரவரி 9-ம் தேதி பேசிய பிறகுதான் விஷயம் முடிவாகும். அதுவரை படப்பிடிப்புகள் இருக்காது. இப்போதுள்ள நிலையே தொடரும்," என்றார்.