twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பேச்சுவார்த்தையில் இழுபறி: 9-ம் தேதி வரை படப்பிடிப்பு கிடையாது!

    By Shankar
    |

    பெப்சி - தயாரிப்பாளர் சங்கம் இடையே சம்பள உயர்வு குறித்து நீடித்து வரும் மோதல் நேற்று முடிவுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி நடக்கவில்லை.

    நேற்று இருதரப்புக்கும் இடையில் நடந்த பேச்சு வார்த்தை ஒரு முடிவை எட்டாததால், மீண்டும் 9-ம் தேதி சந்தித்துப் பேசுவதென முடிவு செய்யப்பட்டது. அதுவரை படப்பிடிப்புகள் நடக்காது என்ற நிலையை பெப்சி மேற்கொண்டுள்ளது.

    தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் எஸ் ஏ சந்திரசேகரன் தலைமையிலும், பெப்சி பிரதிநிதிகள் இயக்குநர் அமீர் தலைமையிலும் நேற்று பேச்சு நடத்தினர்.

    இதுகுறித்து எஸ் ஏ சந்திரசேகரன் கூறுகையில், "தமிழக அரசின் நோக்கம் புரிந்து நாங்கள் சிலவற்றை விட்டுத் தர முன் வந்துள்ளோம். அடுத்த கூட்டத்தில் நல்ல முடிவை எட்டி விடுவோம்," என்றார்.

    இயக்குநர் அமீர் கூறுகையில், வரும் பிப்ரவரி 9-ம் தேதி பேசிய பிறகுதான் விஷயம் முடிவாகும். அதுவரை படப்பிடிப்புகள் இருக்காது. இப்போதுள்ள நிலையே தொடரும்," என்றார்.

    English summary
    The joint meeting between Tamil Film Producers Council (TFPC) and Film Employees Federation of south India (FEFSI) over wage revision held at the state governments Labour department office failed. Ameer who represents Director’s Union and is sympathetic to workers cause said: “We will be meeting again on February 9 to sort out the issue. Till then there will be no shooting.”
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X