Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தூக்கு.. வைக்காதே.. இப்படியே பிரச்சனை பண்ணி பப்ளிசிட்டி கொடுங்க: மயில்சாமி மடேர்! #Mersal
Recommended Video
சென்னை: அனைத்து அமைச்சர்களும் ஒவ்வொரு படத்தை பார்த்து இதை தூக்கு, இதை வைக்காத என்று சொன்னீர்கள் என்றால் தேனாண்டாள் இன்று எவ்வளவு சந்தோஷமாக இருக்கோ அதே போன்று அனைத்து தயாரிப்பாளர்களும் சந்தோஷமாக இருப்பார்கள் என்கிறார் மயில்சாமி.
தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் மெர்சல் சர்ச்சை குறித்த விவாத நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகர் மயில்சாமி கலந்து கொண்டு தனக்கே உரிய பாணியில் பேசினார்.
நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது,
|
நூறாவது நாள்
நூறாவது நாள் என்று ஒரு படம். ஒரு தனிப்பட்ட நபர் ஒன்பது கொலைகள் செய்வது போன்று படம் எடுத்தார்கள். அதன் பிறகு ஊமை விழிகள் என்ற படத்தில் ஒரு கான்செப்ட் ஆட்டோ சங்கரை பேஸ் பண்ணியிருந்தது. இது போன்று ஒவ்வொரு படங்களிலும் சமுதாயத்தில் நடப்பவைகளை காட்சிகளாக வைக்கும்போது இந்த மாதிரி நடந்தது படத்தில் வச்சாங்க.
காட்சிகள்
நுங்கம்பாக்கத்தில் கழுத்தை அறுத்த சம்பவம் படமாகிறது. டெல்லியில் பஸ்ஸில் பலாத்காரம் செய்த சீன் படங்களில் வந்துள்ளது. நடக்கிறதால் அதை வச்சாங்க. அதை எல்லாம் ஏற்றுக் கொண்டார்கள்.
விஜய்
ஜிஎஸ்டி என்கிற விஷயத்தால் மக்கள் பாதிக்கப்பட்டதை அவர் சொல்லியிருக்கிறார். அதில் தவறு எதுவும் இல்லை. இல்லாத விஷயத்தை விஜய் சொன்னால் சரி. அவர் சொன்னது தவறு என்று லட்சக்கணக்கானவர்கள் கொடி ஏந்தி போராட்டம் பண்ணியிருந்தால் ஒத்துக் கொள்ள வேண்டிய விஷயம். யாருமே பண்ணவில்லையே.
நியாயம்
நாம் கொண்டு வந்த சட்டத்தை இங்கு தவறான முறையில் சொல்கிறார்களே என்கிற கான்செப்ட்டில் சென்சார் முடிந்த பிறகு அதை விளக்க வேண்டும் என்பது எந்த விதத்திலும் நியாயமே கிடையாது.
மெர்சல்
ஒவ்வொரு பெரிய படத்திற்கும் பப்ளிசிட்டிக்கு மட்டும் ரூ. 2 கோடி பட்ஜெட். எனக்கு தெரிந்து திரையுலகத்தில் இந்தியா முழுவதும் மெர்சலுக்கு இப்படி ஒரு பப்ளிசிட்டி யாருமே பண்ண முடியாது. அந்த காட்சிகள் எப்பொழுது வெட்டப்பட்டதோ அது வாட்ஸ்ஆப்பில் பறக்கிறது.
பிரபலம்
இத்தனை படங்களில் இல்லாத அளவுக்கு விஜய் இந்த படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார். இதற்காக மத்திய, மாநில அரசுகளை சேர்ந்த சிலருக்கு நான் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அமைச்சர்கள்
இந்த படத்திற்கு மட்டும் இல்லை ஒவ்வொரு படத்திற்கும் இதே மாதிரி பப்ளிசிட்டி செய்து தயாரிப்பாளர்களை காப்பாற்றுங்கள். அனைத்து அமைச்சர்களும் ஒவ்வொரு படத்தை பார்த்து இதை தூக்கு, இதை வைக்காத என்று சொன்னீர்கள் என்றால் தேனாண்டாள் இன்று எவ்வளவு சந்தோஷமாக இருக்கோ அதே போன்று அனைத்து தயாரிப்பாளர்களும் சந்தோஷமாக இருப்பார்கள். மத்திய அரசே, மாநில அரசே ஒவ்வொரு படத்திற்கும் நீங்களே விமர்சனம் பண்ணுங்க, எந்த தயாரிப்பாளரும் டிவியில் விளம்பரம் பண்ணத் தேவையில்லை என்றார் மயில்சாமி.