Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விஜய் அப்பா மீது கொலை மிரட்டல் புகார் கொடுத்த ஜாக்குவார் தங்கம்
அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
நான் எம்.ஜி.ஆர். நகரில் வசிக்கிறேன். தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளேன். சுமார் 800 படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்துள்ளேன். கடந்த திங்கள் அன்று தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர கூட்டம் தி.நகரில் நடந்தது.
அதில் அண்டை மாநிலங்களில் இருப்பது போல தமிழ்நாடு திரைப்படத் துறைக்கும் தனியாக தொழிலாளர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினோம். அப்போது, நான் இந்தியா என்ற படத்தை தயாரிக்கிறேன். கார்த்தி நடிக்கும் அலெக்ஸ் பாண்டியன் படப்பிடிப்பையும் நிறுத்திவிட்டீர்கள். ஆனால் சிலர் தயாரிக்கும் படத்தின் ஷூட்டிங் மட்டும் நடந்து கொண்டிருக்கிறது. எங்கள் ஷூட்டிங்கை மட்டும் ஏன் அனுமதிக்கவில்லை என்று கேட்டேன். இதற்கு ரிஷிராஜ், தமிழ் அரசன், பிரி மூஸ்டர், ராஜி சிற்பி ஆகியோர் என்னை கேவலமாக திட்டினர்.
துப்பாக்கி படத்தை பற்றி பேசினால், நாங்கள் துப்பாகியால் தான் பேசுவோம் என்றனர். தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், செயலாளர் தேனப்பன் ஆகியோர் என்னை பார்த்து கேவலமாக திட்டினர். மிரட்டி அடிக்க பாய்ந்தனர். கலைப்புலி சேகரன், ராதாகிருஷ்ணன், சுப்பையா, ராகவா, பாலாஜி ஆகியோர் என்னை காப்பாற்றினர். எஸ்.ஏ. சந்திரசேகரன் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். அதைத் தொடர்ந்து மர்ம போன் மிரட்டல்கள் வருகின்றன. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
அவரது புகார் குறித்து விசாரணை நடத்துமாறு தி.நகர் துணை கமிஷனர் அசோக் குமாருக்கு, கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.