Don't Miss!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Sports DC vs GT : டாப் ஆர்டரில் அசத்திய அக்சர் படேல்.. ஜடேஜாவை பொளக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- News உடல் பருமன் அறுவை சிகிச்சையால் இறந்த மகன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பூஜா பட்டுக்கு செல்போனில் ஆபாச திட்டு... கொலை மிரட்டல்!
பிரபல இந்தி நடிகை மற்றும் இயக்குநர் பூஜா பட். இவருக்கு நேற்று முன்தினம் செல்போனில் கொலை மிரட்டல் வந்துள்ளது. போனில் பேசிய மர்ம ஆசாமி யார் என்று தெரியவில்லை.
மிரட்டலால் பூஜாபட் அதிர்ச்சியாகியுள்ளார். இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். மிரட்டியவரின் செல்போன் நம்பரையும் போலீசாரிடம் எழுதி கொடுத்துள்ளார்.
இது குறித்து பூஜாபட் கூறுகையில், "செல்போனில் மர்ம ஆசாமி ஒருவன் பேசினான். கேவலமாகவும் ஆபாசமாகவும் என்னை திட்டினான். மிரட்டவும் செய்தான். அவன் யார் என்று தெரிய வில்லை. திட்டித் தீர்த்த பிறகு போனைத் துண்டித்து விட்டான். இதனால் நான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானேன்.
மிரட்டல் விடுத்தவனின் போன் நம்பர் என் செல்போனில் பதிவாகி உள்ளது. இது குறித்து போலீசில் புகார் செய்துள்ளேன்," என்றார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள்.
மகள் பூஜா பட்டுக்கு இந்த மாதிரி மிரட்டல் வந்திருப்பது கவலை அளிப்பதாக அவரது தந்தை இயக்குநர் மகேஷ் பட் தெரிவித்தார்.