Don't Miss!
- Education குரூப்-1 வேலைக்கான நேர்முகத் தேர்வு முடிவுகள் ரிலீஸ்...குஷியில் தேர்வர்கள்...!
- News வெடித்து சிதறிய பட்டாசு.. சிக்கலில் சிக்கிய அமைச்சர் கேஎன் நேரு மகன் அருண் நேரு.. பாய்ந்தது வழக்கு
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
கடலில் விழுந்து சாகணுமா?: செய்தியாளர் சந்திப்பில் அழுத இயக்குனர்
சென்னை: புதுமுகங்களை வைத்து படம் இயக்கினால் கடலில் விழுந்து சாக வேண்டுமா என்று கேட்டு கண் கலங்கினார் இயக்குனர் எஸ்.பி.டி.ஏ. குமார்.
அர்ஜுனா, வினு கிருத்திக், நிரஞ்சன், சுமன், சுரேஷ், பாண்டியன், யாமினி பாஸ்கர் உள்ளிட்டோரை வைத்து புதுமுகம் எஸ்.பி.டி.ஏ. குமார் இயக்கியுள்ள படம் முன்னோடி. படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.
அப்பொழுது இயக்குனார் குமார் கூறும்போது,
சினிமா
நான் சினிமா பின்னணி இல்லாத குடும்பத்தில் இருந்து வந்தவன். என் அப்பா படம் பார்த்தது இல்லை. எனக்கு படம் பார்க்க அனுமதியும் அளிக்கவில்லை. அப்படி இருந்தும் எனக்கு சினிமா மீது ஆர்வம் ஏற்பட்டது.
போராட்டம்
சினிமா படம் இயக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். 18 ஆண்டு போராட்டத்திற்கு பிறகே படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் சம்பாதித்த காசில் படம் எடுத்துள்ளேன்.
முன்னோடி
முன்னோடி படத்திற்காக இரண்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டுள்ளேன். நான் கஷ்டப்படக் கூடாது என்று என் குடும்பத்தார் நினைத்தனர். நான் பட்ட கஷ்டத்தை எல்லாம் என்னோடு சேர்ந்து பொறுத்துக் கொண்டனர்.
கிண்டல்
நான் கஷ்டப்பட்டு எடுத்துள்ள படத்தை தியேட்டரில் பார்க்க குறைந்தது 10 பேராவது வருவார்களா என்று கிண்டல் செய்கிறார்கள். படம் நல்லாவே இருந்தாலும் யாரும் பார்க்க மாட்டார்கள் என்கிறார்கள். ஏன் புதுமுகங்களை வைத்து படம் இயக்கினால் கடலில் விழுந்து சாகணுமா என்று கேட்ட குமார் கண் கலங்கிவிட்டார்.