Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சசிகுமாருக்கு கதை சொல்ல ஒரு வருடம் காத்திருந்த புது இயக்குநர்!
இன்றைக்கு முன்னணி நடிகர்கள் மட்டுமல்ல, அதற்கு அடுத்த நிலையில் உள்ள நடிகர்-நடிகைகளுக்கு கதை சொல்லக் கூட மாதக் கணக்கில் அலைய வேண்டும். சில ஹீரோக்களின் கால்ஷீட் பெற அவர்களுடன் ஆண்டுக்கணக்கில் அலைந்து கொண்டே இருக்க வேண்டும்.
இதற்கு காரணம் என்று தேடிப் போனால்.. அது ஒரு பெரிய அலுப்புக் கதையாகிவிடும்.
விஷயத்துக்கு வருவோம்... இயக்குநர் - நடிகர் சசிகுமாருக்காகவே ஒரு கதையை எழுதி வைத்துவிட்டு ஒரு ஆண்டுகள், அந்தக் கதையை அவரிடம் சொல்ல முடியாமல் காத்திருந்திருக்கிறார் ஒரு இயக்குநர். அவர் வசந்தமணி. டிபி கஜேந்திரனிடம் துணை இயக்குநர், ஜில்லாவில் நேசனுடன் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.
சசிகுமாரை வைத்து இப்போது வெற்றிவேல் படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.
ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ், ஆர். ரவிந்திரன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். 500-க்கும் மேற்பட்ட படங்களை விநியோகித்தவர் ரவீந்திரன். தயாரிப்பாளராக அவருக்கும் இது முதல் படம்.
இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் பிரபு, தம்பி ராமையா மற்றும் இளவரசு நடிக்கின்றனர். மியா ஜார்ஜ், நிகிலா மற்றும் வர்ஷா என முன்று கதாநாயகிகள்.
இயக்குநர் வசந்தமணியிடம் பேசினோம்.
"காதலையும் குடும்பத்தையும் மைய்யமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் நகைச்சுவை, ஆக்ஷன், சென்டிமெண்ட் என அனைத்தும் உண்டு.
இந்தப் படத்தின் கதையை சசிகுமாரை மனதில் வைத்துதான் எழுதினேன். ஆனால் அவரிடம் நேரில் சொல்ல வாய்ப்பே கிடைக்கவில்லை. யார் யார் மூலமோ சொல்லியும் அவர்கள் சசிகுமாரிடம் விஷயத்தைச் சொல்லவே இல்லை. ஒரு ஆண்டு கழித்து யதேச்சையாக அவரைச் சந்தித்து சொன்னேன். நல்ல கதை. ஏன் இத்தனை நாள் காத்திருந்தீர்கள்? உடனே ஆரம்பிக்கலாமே என்றார்.
தாரை தப்பட்டை முடிந்த கையோடு இந்தப் படத்தை ஆரம்பித்தோம். 70 நாட்களில் முடித்துவிட்டோம்.
சசிகுமார் மிக அருமையான மனிதர். சிறந்த நடிகர். அவரை வைத்து இயக்கியதற்காக இதைச் சொல்லவில்லை. தான் ஒரு இயக்குநர் என்றாலும் என் சுதந்திரம் இம்மி அளவுக்கும் பாதிக்காமல் பார்த்துக் கொண்டார்," என்றார்.