Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஜெ. அத்தையின் வாழ்க்கையை படமாக்க விட மாட்டோம்: தீபக் அடம்
Recommended Video
சென்னை: ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க அவரின் அண்ணன் மகன் தீபக் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப் போவதாக இயக்குனர் ஏ.எல். விஜய் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதையடுத்து தானும் ஜெயலலிதாவின் வாழ்க்கை பற்றிய படத்தை எடுக்கப் போவதாக இயக்குனர் ப்ரியதர்ஷினியும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஜெயலலிதா
இயக்குனர் இமயம் பாரதிராஜாவும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் விஜய்யும், ப்ரியதர்ஷினியும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று படப்பிடிப்பை துவங்கப் போவதாக தெரிவித்துள்ளனர். இப்படி மூன்று பேர் ஒரே நேரத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க உள்ளனர்.
ஐஸ்வர்யா ராய்
என் வாழ்க்கை படமாக்கப்பட்டால் ஐஸ்வர்யா ராய் என் கதாபாத்திரத்தில் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று ஜெயலலிதா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அதை மனதில் வைத்து பாரதிராஜா ஐஸ்வர்யா ராய் மற்றும் அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். ஐஸ்வர்யா ராய் ஒப்புக் கொண்டால் ஜெயலலிதாவின் ஆசை நிறைவேறிவிடும்.
நயன்தாரா
ஏ.எல். விஜய் மற்றும் ப்ரியதர்ஷினி ஆகியோரின் படங்களில் ஜெயலலிதாவாக நடிக்க வைக்க த்ரிஷா, நயன்தாரா, வித்யா பாலன், மஞ்சிமா மோகன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது. மூன்று இயக்குனர்கள் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை கையில் எடுத்துள்ள நிலையில் அவரின் குடும்பத்தாரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தீபக்
அத்தையின் வாழ்க்கையை படமாக எடுப்பது குறித்து என்னிடமும், என் சகோதரி தீபாவிடமும் அனுமதி பெற வேண்டும். மேலும் சசிகலாவிடமும் அனுமதி பெற வேண்டும். இதுவரை யாரும் எங்களிடம் அனுமதி பெறவில்லை. அத்தையின் வாழ்க்கையை படமாக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மீறி படம் எடுத்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்றார் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்.