twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தீபிகா படுகோன் க்கு கிடைத்த கவுரவம்… கேன்ஸ் திரைப்பட விழாவில் நடுவராக பங்கேற்பு

    |

    மும்பை : பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் அரிய கவுரவத்தை பெற்றுள்ளார். ஆஸ்காருக்கு இணையான கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்தி திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தீபிகா படுகோன். இந்தியில் மட்டும் இல்லாமல் ஹாலிவுட்டில் நடித்து அங்கேயும் புகழ் பெற்றார்.

    தற்போது அவர் கேன்ஸ் திரைப்பட விழாவில் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

    KGF Chapter 2 வெற்றி பெற்ற வயிற்றெரிச்சல் .. கிச்சா சுதீப்புக்கு சபாஷ் சொன்ன பிரபல இயக்குநர்!KGF Chapter 2 வெற்றி பெற்ற வயிற்றெரிச்சல் .. கிச்சா சுதீப்புக்கு சபாஷ் சொன்ன பிரபல இயக்குநர்!

    தீபிகா படுகோன்

    தீபிகா படுகோன்

    தீபிகா படுகோன் ஷாருக்கான் நடித்த ஓம் சாந்தி ஓம் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இப்படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்த தீபிகா படுகோன் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார். அதைத் தொடர்ந்து அவருக்கு ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதும் ஒரு நடிகையாக மேலும் மேலும் வளர்ந்தார். ஒரு கட்டத்தில் ஹிந்தியில் முன்னணி கதாநாயகியாக சிலகாலம் வலம் வந்தார். இவர் தற்போது வரை மூன்று முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்றுள்ளார். 2018 ஆம் ஆண்டு டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட 100 செல்வாக்குமிக்க ஆட்களில் ஒருவராக தீபிகா படுகோன் அறிவிக்கப்பட்டார்.

    நடிகருடன் திருமணம்

    நடிகருடன் திருமணம்

    தீபிகா படுகோன் ஆரம்பகால கட்டத்தில் தனது சக நடிகரான ரன்பீர் கபூருடன் காதலில் விழுந்தார். இருவரும் தொடர்ந்து பல இடங்களில் ஜோடியாக காணப்பட்டனர். தீபிக படுகொன் மீடியாக்களிடம் அதைப் பற்றி பகிரங்கமாக அறிவித்தார். ரன்பீர் கபூர் பெயரின் முதல் எழுத்தை தனது கழுத்தில் பச்சை குத்திக் கொண்டார். அடுத்த ஒரு ஆண்டில் அவர்கள் இருவருக்கும் இடையிலிருந்த காதல் முறிந்தது. அதன்பின்னர் ரன்வீர் சிங்குடன் காதல் ஏற்பட்டு 2018ஆம் ஆண்டு இந்திய சம்பிரதாயப்படி திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

    75 ஆவது ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழா

    75 ஆவது ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழா

    75 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழா கூடிய விரைவில் துவங்க உள்ளது. ஆஸ்கார் விருதுக்கு இணையான, உலகின் மிகவும் மதிப்புமிக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது. உலகின் சிறந்த கலைப்படைப்புகளை கண்டறிந்து அதற்கு உரிய அங்கீகாரம் தருகிறது கேன்ஸ் திரைப்பட விழா. பல நாடுகளில் இருந்தும் பலரும் இதில் தங்கள் படைப்புகளை சமர்ப்பிக்க விரும்பும் நிகழ்வாக இது உள்ளது. தற்போது நடைபெறவிருக்கும் 75 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் தீபிகா படுகோன் நடுவர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது ஒரு இந்தியருக்கு கிடைத்துள்ள கௌரவமாக பார்க்கப்படுகிறது. இவர்களோடு வேறு சில நாடுகளில் இருக்கும் அரிய திரை கலைஞர்களையும் நடுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதை பெயர் குறிப்பிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

    கேன்ஸ் திரைப்பட விழா - தீபிகா படுகோன்

    கேன்ஸ் திரைப்பட விழா - தீபிகா படுகோன்

    தீபிகா படுகோன் இதற்கு முன்னர் பலமுறை கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார். அப்போது நடிகையாக, ஒரு பங்கேற்பாளராக, விலை உயர்ந்த பொருட்களுக்கு பிராண்ட் அம்பாசிடராக அதில் பங்கேற்றுள்ளார். தற்போது அதே கேன்ஸ் திரைப்பட விழாவில் நடுவர்களில் ஒருவராக பங்கேற்க உள்ளார். கேன்ஸ் திரைப்பட விழா தங்களது அதிகாரபூர்வ வலைத்தளங்களில் இந்த தகவலை பதிவிட அதை தீபிகா படுகோன் ஷேர் செய்துள்ளார். அதோடு தனக்கு இந்த கௌரவத்தை கொடுத்ததற்காக " நமஸ்தே " எமோஜி சேர்த்துள்ளார். இதைப் பாராட்டும் விதமாக அவரது கணவரும் நடிகருமான ரன்வீர் சிங் " வாவ் " எனும் எமோஜி போட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    English summary
    Deepika Padukone become the jury in Cannes Film Festival and Proud moment for her
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X