Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
திடீர் சம்மன்.. போலீசாரிடம் வாட்ஸ் அப் உரையாடலை காண்பிப்பதா..? மானேஜரை விளாசிய தீபிகா படுகோன்!
சென்னை: போலீசாரிடம் வாட்ஸ் அப் உரையாடலை காண்பித்ததாக தனது மானேஜரை தீபிகா படுகோன் விளாசியதாகக் கூறப்படுகிறது.
சுஷாந்த் சிங், கடந்த ஜூன் மாதம் மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து, தனது மகன் சாவுக்கு நடிகை ரியா சக்ரவர்த்திதான் காரணம் என்று கூறி, சுஷாந்த் சிங்கின் தந்தை பீகார் போலீசில் புகார் அளித்தார்.
நுரையீரல் புற்றுநோய்.. சிகிச்சை பெற்றுவந்த பிரபல நடிகர் திடீர் மரணம்.. திரையுலகம் இரங்கல்!
சி.பி.ஐ. விசாரணை
சுஷாந்த் சிங்கின் வங்கி கணக்கில் இருந்து ரூ.15 கோடி மாற்றப்பட்டு இருப்பதாகவும் புகாரில் அவர் கூறி இருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. சுஷாந்த் சிங்கின் தற்கொலை குறித்து சி.பி.ஐ. போலீசாரும், பணமோசடி புகார் குறித்து அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தினர்.
வாட்ஸ் அப் உரையாடல்
இதில், பல திடுக் தகவல்கள் வெளியாயின. சுஷாந்த் சிங் காதலியான நடிகை ரியா சக்கரவர்த்தியின் வாட்ஸ் அப் உரையாடலை கண்ட போலீசாருக்கு, அவருக்கும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சுஷாந்த் தற்கொலையை போதைப்பொருள் வழக்குடன் தொடர்புபடுத்தி, போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரிக்க தொடங்கினர்.
ரியா சக்கரவர்த்தி
விசாரணையில் ரியா போதைப் பொருள் பயன்படுத்தியதும், சுஷாந்த் சிங்குக்காக அவர் போதைப் பொருள் வாங்கியதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் கடந்த 8 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அவர் சகோதரர் சோவிக், சாமுவேல் மிரண்டா, வேலைக்காரர் தீபக் சவாந்த் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாரா அலிகான்
இந்நிலையில், இதையடுத்து ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோருக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சம்மன் அனுப்பி உள்ளனர். தீபிகா படுகோனின் மானேஜர் கரிஷ்மா பிரகாஸுக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தனர். உடல் நலப்பிரச்னை காரணமாக, அவர் ஆஜராவதாக வெள்ளிக்கிழமை வரை அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது.
தீபிகா படுகோன்
இந்நிலையில் கரிஷ்மா பிரகாஷும், டேலன்ட் மானேஜர் ஜெய சஹாவும்தான் தனது வாட்ஸப் உரையாடலை போலீசாருக்கு தெரிவித்துள்ளனர் என்று நடிகை தீபிகா படுகோன் அறிந்தார். அவர்களின் வாட்ஸ் அப் உரையாடலில் ‘டி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது தீபிகா படுகோன் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்களை தீபிகா விளாசியதாகக் கூறப்படுகிறது.
Recommended Video
கோவா ஷூட்டிங்
இதையடுத்து சில வழக்கறிஞர்களுடன் அவர் வீடியோ காலில் நேற்று பேசியுள்ளார். தற்போது சாகுன் பத்ரா இயக்கும் இந்திப் படத்தின் ஷூட்டிங்கிற்காக கோவா சென்றுள்ளார் தீபிகா. இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தில் நடித்து வரும் அவர், இன்று மும்பை திரும்புகிறார் என்றும் நாளை அவர் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் முன் ஆஜராவார் என்றும் கூறப்படுகிறது.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
என்னது சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு இத்தனை கோடி பட்ஜெட்டா?.. பிரமாண்டம் தயாரோ
-
அட GOAT படத்தில் அந்த விஷயமும் இருக்கா..ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் இருக்கோ.. வெளியான லேட்டஸ்ட் தகவல்