Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தீபிகா படுகோனே தந்தை மருத்துவமனையில் அனுமதி.. அம்மா மற்றும் சகோதரிக்கும் கொரோனா உறுதி
பெங்களூரு: பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவின் தந்தை பிரகாஷ் படுகோனே கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பேட்மிண்டன் வீரரான பிரகாஷ் படுகோனே அவரது மனைவி உஜாலா மற்றும் அவரது இளைய மகள் அனிஷா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெறும் 29 வயசு தான் ஆகுது.. காஞ்சனா பட நடிகையின் சகோதரரும் கொரோனாவுக்கு பலி.. சோகத்தில் ரசிகர்கள்
கடந்த சனிக்கிழமை அன்று பிரகாஷ் படுகோனேவுக்கு காய்ச்சல் குறையாத நிலையில், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தீபிகா படுகோனே அப்பா
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனேவின் தந்தையும் முன்னாள் பேட்மிண்டன் வீரருமான பிரகாஷ் படுகோனேவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பே கொரோனா அறிகுறிகள் இருந்த நிலையில், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.
குடும்பத்துக்கே கொரோனா
நடிகை தீபிகா படுகோனே கணவர் ரன்வீர் சிங்குடன் மும்பையில் வசித்து வரும் நிலையில், தீபிகா படுகோனேவின் தந்தை பிரகாஷ் படுகோனே மற்றும் தாய் உஜாலா மற்றும் தங்கை அனிஷா ஆகிய மூவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அனைவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
காய்ச்சல் குறையல
ஆனால், தந்தை பிரகாஷ் படுகோனேவுக்கு ஒரு வார காலம் ஆகியும் காய்ச்சல் குறையாத நிலையில், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த சனிக்கிழமை அன்று அனுமதிக்கப்பட்டார். தற்போது பிரகாஷ் படுகோனேவின் உடல் நிலை சீராகி வருவதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பேட்மிண்டன் வீரர்
65 வயதாகும் பிரகாஷ் படுகோனே இந்தியாவிற்காக பல முறை சர்வதேச அளவில் பேட்மிண்டன் போட்டிகளில் கலந்து கொண்டு ஏகப்பட்ட கோப்பைகளையும் வென்றுள்ளார். 1980களில் அனைத்து இங்கிலாந்து சாம்பியன்ஸ் டைட்டில்களையும் வென்றவர் பிரகாஷ் படுகோனே என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் ஆறுதல்
நடிகை தீபிகா படுகோனேவின் தந்தை மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தாய் மற்றும் தங்கைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட செய்தி அறிந்த ரசிகர்கள் நடிகை தீபிகா படுகோனேவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும், நீங்கள் பாதுகாப்பாக இருங்கள் என்று பதிவுகளை போட்டு வருகின்றனர்.