Don't Miss!
- Sports IPL 2024: ஐபிஎல் வரலாற்றிலேயே மிக மோசமான பவுலிங்.. ரிஷப் பண்ட் வைத்த ஆப்பு.. கதிகலங்கிய மோஹித்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Lifestyle Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- News உடல் பருமன் அறுவை சிகிச்சையால் இறந்த மகன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நான் உணர்ந்ததை சொல்ல... நடன நிகழ்ச்சியில் கண்ணீர் விட்ட தீபிகா
மும்பை: நடிகை தீபிகா படுகோன் நடன நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி நடிகை தீபிகா படுகோன், தமிழில் கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார். பிசி நடிகையான இவர் சப்பாக் என்ற படத்தில் திராவகம் வீசப்பட்ட பெண்ணாக நடித்துள்ளார். உண்மைக் கதையான இந்தப் படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் தனியார் சேனல் ஒன்று நடத்தும் நடன நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார்.
நடன இயக்குனரும் ஏபிசிடி, ஸ்ட்ரீட் டான்சர் படங்களின் இயக்குனரான ரெமோ டிசோசா இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்.
பத்மாவத் பட பாடல்
இதில் நடிகை தீபிகா படுகோனை கவுரவிக்கும் விதமாக அவர் நடித்த பத்மாவத் படத்தில் இடம்பெற்றுள்ள கூமார் என்ற பாடலுக்கு நடன கலைஞர்கள் ஆடினர். இந்த நடனத்தை இருக்கையில் இருந்தபடி கைதட்டி, ரசித்தார் தீபிகா.
திடீரென்று எழுந்தார்
பின்னர் பாடல் முடிந்தபோது திடீரென்று இருக்கையில் இருந்து எழுந்து நின்ற தீபிகா, கை தட்டி பாராட்டுகளைத் தெரிவித்தார். பின்னர் முகத்தை கைகளால் மூடிக்கொண்டு கண்ணீர் விட்டு அழுதார். அவர் நா தழுதழுத்தது.
டிசோசா ஆறுதல்
இதையடுத்து ரெமோ டிசோசா, அவரைக் கட்டிபிடித்து ஆறுதல் சொன்னார். பின்னர் மேடையேறிய தீபிகா, நடன கலைஞர்களை பாராட்டினார். பின் அவர்களிடையே பேசினார்.
இதயத்தில் இருந்து
அப்போது, நான் பல நிகழ்ச்சிகளுக்குச் சென்றிருக்கிறேன். ஆனால், இன்று நான் உணர்ந்ததை சொல்ல வார்த்தைகள் இல்லை. நான் என் இதயத்தில் இருந்து சொல்கிறேன். தேங் யூ ஸோ மச் என்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!