Don't Miss!
- Automobiles இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- News இதுதான் நம்ம தமிழ்நாடு.. மூக்கு மேல் விரல் வைத்த ஈரோடு.. புது டிரஸ்ஸில்.. யாரிந்த 3 பெண்கள்.. சபாஷ்
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
தென்னிந்திய முறைப்படி திருமணம்.. ரன்வீருடன் இணைய தயாராகும் தீபிகா!
Recommended Video
சென்னை : பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோனேவுக்கு தற்போது 32 வயதாகிறது. தீபிகா இந்தி நடிகரும் தனது நெருங்கிய நண்பருமான ரன்வீர் சிங்கை காதலித்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
கே.எஸ்.ரவிக்குமார் ரஜினியை வைத்து இயக்கயிருந்த 'ராணா' படத்தில் நாயகியாக ஒப்பந்தமான தீபிகா படுகோனே, அந்தப் படம் கைவிடப்பட்டதால் பின்னர் சௌந்தர்யா இயக்கத்தில் ரஜினி நடித்த 'கோச்சடையான்' அனிமேஷன் படத்தில் நாயகியாக நடித்தார்.
இந்த நிலையில், தீபிகாவும், ரன்வீர் சிங்கும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தற்போது பாலிவுட்டில் செய்தி வெளியாகியுள்ளது. அதோடு, தனது திருமணத்தை தென்னிந்திய முறைப்படி நடத்த ஆசைப்படுகிறாராம் தீபிகா படுகோனே.
அதனால், தற்போது தீபிகா, ரன்வீர் ஆகிய இருவரும் லண்டனில் இருக்கும் நிலையில், தீபிகாவின் அம்மா மற்றும் சகோதரி ஆகியோர் திருமணத்திற்கு தேவையான பொருட்களையும், தீபிகாவிற்கான நகைகளையும் பெங்களூரில் ஷாப்பிங் செய்து வருகிறார்களாம். விரைவில் இவர்களது திருமண அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.