இறப்பதற்குள் நடிகை தீபிகா செய்ய விரும்பும் காரியம் எது தெரியுமா?
மும்பை: இறப்பதற்குள் நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக உள்ளவர் தீபிகா படுகோனே. சஞ்சய் லீலா பன்சாலியின் பத்மாவதி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இது போக ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

சிகிச்சை
நான் சிவப்பாக மாற சிகிச்சை செய்து கொண்டதாக கேள்விப்பட்டேன். என்னது இது எனக்கே தெரியாமல் சிகிச்சையா என தீபிகா படுகோனே கேள்வி எழுப்பியுள்ளார்.

முதல் சம்பளம்
பெங்களூரில் நடந்த ஃபேஷன் ஷோ ஒன்றில் ராம்ப் வாக் செய்ததற்காக ரூ.3,500 சம்பளமாக பெற்றேன். மாடலிங் செய்து நான் வாங்கிய அந்த பணம் தான் என் முதல் சம்பளம் என்கிறார் தீபிகா.

ஃபெடரர்
நான் பார்த்த நபர்களில் மிகவும் பிரபலமானவர் டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர். நான் அண்மையில் பார்த்ததில் என்னை அழ வைத்த படங்கள் லா லா லேண்ட், மான்செஸ்டர் பை தி சீ என்று தீபிகா தெரிவித்துள்ளார்.

குழந்தைகள்
இறப்பதற்குள் செய்ய விரும்பும் ஒரு காரியம் எது என்று கேட்டதற்கு தீபிகா கூறுகையில், நிறைய குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். அதை தான் விரும்புகிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications











