Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வெற்றி சிரித்து மகிழ வைக்கும்;தோல்வி சிந்தித்து ஜெயிக்க வைக்கும் - சீமான்
சென்னை: வெற்றி மகிழ வைக்கும், தோல்வியோ சிந்தித்து ஜெயிக்க வைக்கும் என்றார் இயக்குநர் சீமான்.
நேற்று நடந்த பார்க்கணும் போல இருக்கு பட விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பேசுகையில், "பெரிய நிறுவனங்களுக்கு இல்லாத துணிச்சல் இந்த எப். சி.எஸ் கிரியேஷன்ஸ் துவார் சந்திரசேகருக்கு இருக்கிறது. முதலில் அவரைப் பாராட்டுகிறேன்.
தோல்வியும் நல்லதுதான்...
இவர் எடுத்த முந்தைய படங்கள் வெற்றி பெறவில்லை என்றார்கள். தோல்வி சொன்னதாம் 'என்னைச் சந்தித்து விட்டுப் போன எவரும் தோற்றதில்லை' என்று. வெற்றி சிரித்து மகிழ வைக்கும்;தோல்வி சிந்தித்து ஜெயிக்க வைக்கும்.
மண்ணின் மைந்தர்கள்
இந்த தயாரிப்பாளருக்கு வெற்றி நிச்சயம் வரும் அவர் எங்கள் சிவகங்கைச் சீமைக் காரர் என்பதில் மகிழ்ச்சி. அவர் மட்டுமல்ல ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் அவர்கள், மகத்தான கலைஞன் கமல் எல்லாரும் எம் மண்ணின்மைந்தர்கள்தான். இங்கே உள்ள அபிராமி ராமநாதன் ஐயா, கஞ்சாகருப்பு, இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார், ஏகாதசி எல்லாருமே என் மண்ணின் மைந்தர்கள்தான்.
நன்றியுள்ள கஞ்சா
கஞ்சாகருப்பு நன்றியுள்ளவன். அவன் உழைத்து அவன் வியர்வையில் சம்பாதித்த பணத்தில் வீடுகட்டினான். அதற்கு அவனை அறிமுகம் செய்தவர்கள் பெயரில் பாலா, அமீர் இல்லம் என்று பெயர் வைத்துள்ளான்.
கோடிக்கணக்கில் கேட்காதப்பா
இந்த இசையமைப்பாளர் அருள்தேவ் வித்யாசாகரிடம் உதவியாளராக இருந்த போது எனக்குத் தெரியும். அவர் இப்படி ஒரு இசையமைப்பாளராக வருவார்என்று நான் நினைக்க வில்லை. இப்போது எனக்கு நினைவுக்கு வருகிறது தாரா பாரதியின் வரிகள் 'இந்தக் காட்டில் எந்த மூங்கில் புல்லாங்குழல் ஆகும் என்று யாருக்குத் தெரியும்.?' பாடல்கள் நன்றாக உள்ளன. இவர் வளர்ந்த போது கோடிக் கணக்கில் சம்பளம் கேட்கக் கூடாது.
இதே பாதையில்
தயாரிப்பாளர் கல்ல கதை திரைக்கதையுள்ள படங்களை எடுக்க வேண்டும். எந்தக் காலத்திலும் நட்சத்திர நடிகர்கள் இவருக்குத் தேவையில்லை. இதே பாதையில் பயணிக்கவும், "என்று கூறி வாழ்த்தினார்
நடிகை நமீதா பேசும் போது, "பாடல்கள் பார்த்தேன்.. நன்றாக இருந்தன. நடித்தவர்கள் நன்றாக நடித்துள்ளார்கள். தயாரிப்பாளர் பல புதியவர்களை அறிமுகப் படுத்தியுள்ளார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள். நீங்களும் ஆசி தாருங்கள்," என்றார்.