Don't Miss!
- News ஆந்திராவில் ஆட்டத்தை ஆரம்பித்த காங்கிரஸ்.. வெளியான லோக்சபா + சட்டசபை வேட்பாளர்கள் பட்டியல்
- Lifestyle 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நடிகை புகார்: பிரபல நடிகரின் மகன் மீது பலாத்கார வழக்குப்பதிவு செய்ய கோர்ட் உத்தரவு
Recommended Video
டெல்லி: நடிகையை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி, கருவை கலைத்த நடிகர் மகாக்ஷய் மற்றும் அவரின் தாய் யோகிதா பாலி மீது வழக்குப்பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாக்ஷய் பிரபல நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் மகன் ஆவார்.
பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் மகன் மகாக்ஷய் மீது இந்தி மற்றும் போஜ்புரி படங்களில் நடித்துள்ள நடிகை ஒருவர் டெல்லியில் உள்ள ரோஹினி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அவர் தனது மனுவில் கூறியதாவது,
கர்ப்பம்
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மகாக்ஷய் என்னுடன் 4 ஆண்டுகள் பழகினார். நாங்கள் நெருங்கிப் பழகியதில் நான் கர்ப்பம் ஆனேன். ஏதோ மருந்து கொடுத்து என் கருவை கலைத்தார். திருமண ஆசை காட்டி ஏமாற்றி என்னை பலாத்காரம் செய்த மகாக்ஷய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மிரட்டல்
கரு கலைந்த பிறகு மகாக்ஷயின் தாய் யோகிதா பாலி என்னை மிரட்டினார். என் மகனுடன் உறவை தொடர்ந்தால் பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்று அவர் மிரட்டினார்.
டெல்லி
உயிருக்கு பயந்து நான் மும்பையில் இருந்து டெல்லிக்கு இடம் பெயர்ந்தேன். மகாக்ஷயும் தனது தாயுடன் சேர்ந்து என்னை மிரட்டினார் என்று அந்த நடிகை தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
வழக்கு
வழக்கை விசாரித்த நீதிமன்றம் மகாக்ஷய் மற்றும் அவரின் தாய் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. பிரபல நடிகரின் மகன் பலாத்கார வழக்கில் சிக்கியுள்ளது திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
உத்தரவு
அந்த பெண்ணின் குற்றச்சாட்டு குறித்து நிச்சயம் போலீசார் விசாரணை நடத்த வேண்டும். மேலும் மகாக்ஷய் மீது பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!