Don't Miss!
- News "வாழ்க திராவிட மாடல்".. 'இது என்ன கொடுமை?' பொங்கி எழுந்த அன்புமணி ராமதாஸ்
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
சுஷாந்த் சிங் ராஜ்புத் பயோபிக்… டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!
டெல்லி : மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வர உள்ளது.
நய்யே தி ஐஸ்டிஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் சுஷாந்த் சிங்கின் கதாபாத்திரத்தில் ஜூபர் கான் நடித்துள்ளார்.
நடிகர் விமலோட குட்டி தேவதை... முதலாண்டு பிறந்தநாள் கொண்டாட்டம்... புகைப்படம் பகிர்ந்த விமல்
ஜூன்11 ந் தேதி இத்திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் இத்திரைப்படத்திற்கு தடை விதித்துள்ளது.
டோனி வாழ்க்கை வரலாறு
டோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் கடந்த ஆண்டு மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வாழ்க்கை வரலாறு
இந்நிலையில் அவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு நய்யே தி ஐஸ்டிஸ் என்ற பெயரில் திலீப் குலாட்டி இப்படத்தை இயக்கி உள்ளார். ஜூன்11ந் தேதி இத்திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் சுஷாந்தின் தந்தை கிருஷ்ணா கிஷோர் சிங் இந்த திரைப்படத்தை வெளியிடக்கூடாது என டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பெயருக்கு கலங்கமின்றி
இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது, அப்போது பட தயாரிப்பாளர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் படத்தையோ, அவரது பெயரையோ படத்தில் பயன்படுத்தப்படவில்லை என்று கூறினார். மேலும் சுஷாந்த் சிங்கின் பெயருக்கு கலங்கம் வரும் படி எந்த காட்சிகளும்அப்படத்தில் இல்லை என்று வாதிட்டார்.
இடைக்காலத் தடை
இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி சஞ்சீவ் நருலா இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவிக்கும் வரை திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனரிடம் கேட்டுக்கொண்டது.இதையடுத்து, இப்படத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடைவிதித்துள்ளது.