Don't Miss!
- Lifestyle திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
டிமாண்டி காலனி படத்தின் கதை என்ன?
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள ஒரு காலனியில் பல வருடங்களாக பேய் இருப்பதாக ஒரு நம்பிக்கை உள்ளது. இதனை மையமாக வைத்து டிமாண்டி காலனி படத்தை உருவாக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் அஜய் ஞானதாஸ்.
நடிகர் அருள்நிதி மற்றும் அவரது நண்பர்கள் டிமாண்டி காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்க வரும் போது அங்கு நடைபெறும் சம்பவங்களை மையமாக வைத்து கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
சிங்கம் புலி,மதுமிதா, சூது கவ்வும் ரமேஷ் திலக், சனத் மற்றும் அபிஷேக் உட்பட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தில் அருள்நிதிக்கு ஹீரோயின் கிடையாது.
சிரிப்பு பேய் இல்ல சீரியஸ் பேய்
இப்போது வரும் அனைத்து பேய் படங்களும் காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் வேளையில் இந்தப் படம் சீரியஸ் பேய் படமாம்.
யாவரும் நலம்,ஈரம் வரிசையில்
மாதவன் நடித்த யாவரும் நலம் ஆதி நடித்த ஈரம் படங்கள் போல இந்தப் படம் செம திகில் படமாக இருக்குமாம்.
பேயாக மாறும் ஹீரோ
பேய்களின் அட்டகாசத்தால் பாதிக்கப் படும் அருள்நிதி ஒரு கட்டத்தில் பேயாக மாறி எல்லோரையும் பயமுறுத்த அதற்கு பின் என்ன என்பது கிளைமாக்ஸ்.
இசையமைப்பாளர்கள்
இசையமைப்பாளர் கெபா ஜெரிமியா இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் டம்மி பீசு பாடலை இசையமைப்பாளர் டி.இமானும், வாடா வா மச்சி பாடலை கொலைவெறி புகழ் அனிருத்தும் பாடியுள்ளனர்.
ஜெயிப்பாரா
அருள்நிதி பேயாக சாரி ஹீரோவாக ஜெயிப்பாரா ..முடிவு இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்து விடும்..