Don't Miss!
- News இது என்ன ஜனநாயகம்.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிதி முடக்கப்படுகிறது.. தலைவர்கள் குமுறல்
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
யாரும் வேணும்னு ஆசைப்படுவது இல்லை: சூப்பர் ஸ்டாரை விளாசிய தீபிகா
மும்பை: மன அழுத்தம் குறித்து கருத்து தெரிவித்த சல்மான் கானை விளாசியுள்ளார் நடிகை தீபிகா படுகோனே.
பாலிவுட்டில் போராடிக் கொண்டிருந்தபோது மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாக நடிகை தீபிகா படுகோனே பலமுறை தெரிவித்துள்ளார். மேலும் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அதை மறைக்காமல் மருத்துவரிடம் சென்று உரிய உதவி பெற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் மனஅழுத்தம் பற்றி பேசியது தீபிகாவுக்கு பிடிக்கவில்லை.
தீபிகா படுகோனே
மனஅழுத்தம் ஏற்படும் வாய்ப்பே கிடைக்கவில்லை என்று சல்மான் கான் தெரிவித்தார். இதை கேட்ட தீபிகா அவரை விளாசியுள்ளார். என் மனஅழுத்த அனுபவம் பற்றி ஒரே வார்த்தையில் கூற வேண்டும் என்றால் போராட்டம் என்பேன். ஒவ்வொரு நொடியுமே போராட்டம் தான். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டபோது எப்பொழுதுமே அசதியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார் தீபிகா.
ஆசை
மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார். யாரும் தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட வேண்டும் என்று ஆசைப்படுவது இல்லை என்று தீபிகா கூறியுள்ளார். தீபிகா பெயரை குறிப்பிடாமல் பேசினாலும் அவர் சல்மான் கானை தான் குறிப்பிடுகிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.
புகழ்
பணம், புகழ், குடும்பம் என்று அனைத்தும் இருந்தால் மன அழுத்தம் ஏன் வரப் போகிறது என்ற நினைப்பு உள்ளது. மன அழுத்தம் என்றால் என்ன, அது ஏன் ஏற்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மன அழுத்தம் ஏற்படுவது நம் கையில் இல்லை. ஒரு குறிப்பிட்டவர்களுக்கு தான் மன அழுத்தம் ஏற்படும் என்று நினைப்பது தவறு என்கிறார் தீபிகா.
நடிகைகள்
மன அழுத்தம் பற்றி வெளியே தெரிவிக்க பலர் பயப்படுகிறார்கள். இதில் பயப்பட எதுவுமே இல்லை. உரிய சிகிச்சை பெறுவது அவசியம் என்று தீபிகா கூறியுள்ளார். மன அழுத்தம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த லிவ் லவ் லாஃப் பவுன்டேஷனை தீபிகா கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி துவங்கினார். தீபிகா மனம் திறந்து பேசிய பிறகு பல நடிகைகள் மன அழுத்தம் குறித்து பேசத் துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.