Don't Miss!
- News பெண் துணை தாசில்தார் அளித்த புகார்.. மத்திய இணையமைச்சர் எல் முருகன் மீது அதிரடி வழக்கு! புது சிக்கல்
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பாடாய்படுத்திய நோய் மீண்டும் வந்துவிடுமோ: பயத்தில் தீபிகா படுகோனே
மும்பை: தன்னை பாடாய்படுத்திய நோய் மீண்டும் வந்துவிடுமோ என்ற பயத்தில் உள்ளாராம் நடிகை தீபிகா படுகோனே.
தீபிகா படுகோனே நடித்துள்ள வரலாற்று படமான பத்மாவதி பல சிக்கல்களில் சிக்கியுள்ளது. படத்தின் பெயரை மாற்றுமாறும், 26 இடங்களில் கத்தரி போடுமாறும் சென்சார் போர்டு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து தீபிகா கூறியிருப்பதாவது,
கதாபாத்திரம்
பத்மாவதி கதாபாத்திரம் அழகு அல்ல ஆத்மா தொடர்புடையது. நான் பத்மாவதியாகவே வாழ்ந்து கொண்டிருந்தேன். ஒரு பிரேக் எடுத்து அந்த கதாபாத்திரத்தில் இருந்து வெளியே வர வேண்டும். அதன் பிறகே அடுத்த படத்தில் நடிப்பேன்.
கஷ்டம்
முன்பு நான் மன அழுத்தத்தால் ரொம்பவும் கஷ்டப்பட்டேன். என் அம்மாவிடம் கூட தெரிவிக்காமல் தனியாக தவித்தேன். பின்னர் டாக்டரை அணுகி உரிய சிகிச்சை எடுத்து குணமடைந்தேன்.
மீண்டும்
மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டாலும் அது மீண்டும் வந்துவிடுமோ என்ற பயம் எனக்கு எப்பொழுதுமே உண்டு. மன அழுத்தம் பற்றி பேச நான் வெட்கப்படவில்லை.
மகிழ்ச்சி
சினிமா பின்னணி இல்லாமல் இந்த துறைக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது. இந்த துறை பாதுகாப்பானதாக நான் உணர்கிறேன் என்கிறார் தீபிகா.