Don't Miss!
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
எக்ஸலென்ட் என வாழ்த்திய ரஜினி.. லீக்கான ஆடியோ.. கவலையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநர்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை பார்த்து பாராட்டிய ஆடியோ லீக்கானதால் அதன் இயக்குநரான தேசிங்கு பெரியசாமி கவலையில் அடைந்துள்ளார்.
Recommended Video
கடந்த பிப்ரவரி மாதம் வெளியான படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.
துல்கர் சல்மான், ரிது வர்மா, ரக்ஷன், நிரஞ்சனி அகத்தியன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இசை குறிப்புகளை சேதப்படுத்திட்டாங்க.. பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் மீது இளையராஜா புகார்!
வசூலை குவித்தது
இந்தப் படம் யூகிக்க முடியாத வகையில் பல அதிரடி திருப்பங்களுடன் மிகவும் சுவாரசியமாக காட்சியாக்கப்பட்டிருந்தது. இதனால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. நல்ல வசூலையும் குவித்தது இந்தப் படம்.
எக்ஸலென்ட்
இந்நிலையில் தற்போது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் அதன் இயக்குநர் தேசிங்கு பெரியசாமியை போனில் தொடர்பு கொண்டு பாராட்டினார். படத்தை எக்ஸ்லென்ட், சூப்பர் என புகழ்ந்த ரஜினி இத்தனை நாட்கள் கழித்து தாமதமாக படத்தை பார்த்ததற்கு வருத்தம் தெரிவித்தார்.
கடவுளுக்கு நன்றி..
நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்தியதை தனது டிவிட்டர் பக்கத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் நேற்று பகிந்தார் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி. நடிகர் ரஜினிகாந்த் பேசிய வார்த்தைகளை குறிப்பிட்டு கடவுளுக்கு நன்றி தெரிவித்திருந்தார் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி.
கசிந்த ஆடியோ
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் தேசிங்கு பெரியசாமியுடன் பேசிய ஆடியோ இன்று சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது. அந்த ஆடியோ உரையாடல் ஊடகங்களிலும் செய்தியாக ஒளிபரப்பப்படுகிறது.
அவ்ளோ சந்தோஷம்
இதனால் கவலை அடைந்துள்ளார் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி. இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், விஷ் பண்ண எல்லாருமே, என்கிட்டேயே தலைவர் பேசின மாதிரி அவ்ளோ சந்தோஷமுன்னு சொல்றாங்க.. எல்லோருக்கும் நன்றியும் அன்பும்.
துரதிர்ஷ்டவசமாக..
ஆனால் மிகவும் பர்சனலான அந்த போன் கால் உரையாடல் லீக்கானதால் தனிப்பட்ட முறையில் நான் மகிழ்ச்சியாக இல்லை. என்னுடைய டிவிட்டில் கூட நான் தலைவரின் பெயரை குறிப்பிடவில்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடந்துவிட்டது. எல்லாம் நன்மைக்கே.. உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி.. என குறிப்பிட்டுள்ளார்.