தேசிய அளவில் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற சூர்யாவின் சிங்கக்குட்டி
Recommended Video
சென்னை: நடிகர் சூர்யாவின் மகன் தேவ் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.
சூர்யா, ஜோதிகா தம்பதியின் பிள்ளைகளான தியா மற்றும் தேவ் ஆகியோருக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம். தியா அண்மையில் நடந்த மாநில அளவிலான பெண்களுக்கான ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

தேவ் இஷ்ரின்யூ முறைப்படி கராத்தே கற்று வருகிறார். இந்நிலையில் டெல்லியில் நடந்த தேசிய அளவிலான ஷென் இஷ்ரின்யூ கராத்தே போட்டியில் தேவ் கலந்து கொண்டார்.
இஷ்ரின்யூ முறைப்படி பயின்ற தமிழகத்தை சேர்ந்த 40 பேர் அந்த போட்டியில் கலந்து கொண்டனர். அதில் தண்டர் கேக் பிரிவில் தேவ் வெற்றி பெற்றுள்ளார். போட்டியை சூர்யா, ஜோதிகா, தியா ஆகியோர் நேரில் கண்டு ரசித்தனர்.
தேவ் வெற்றி பெற்றபோது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள். மகள், மகனால் அடுத்தடுத்து சூர்யா, ஜோதிகா பெருமை அடைந்துள்ளனர்.
பெற்ற பிள்ளைகளால் பெருமைப்படுவது தானே பெற்றோருக்கு கிடைக்கும் உச்சக்கட்ட சந்தோஷம்.


Click it and Unblock the Notifications











