Don't Miss!
- News "ஐயோ பாவம்!" அண்ணாமலை, தமிழிசை.. தனது ஸ்டைலில் ஆளுக்கு ஒரு சொலவடை சொல்லி கலாய்த்த துரைமுருகன்!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேரும் பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு பேட்டிங் இறங்கிட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான RR
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
தெய்வத்தை மனிதன் தண்டிக்க முடியுமா, முடியாது சார்.. தேவா
சென்னை: தெய்வத்தை மனிதன் தண்டிக்க முடியுமா.. முடியாது சார். அப்படித்தான் ஜெயலலிதாவுக்கான தண்டனையும். அவர் மீண்டு வருவார், சாதனை படைப்பார். பிரதமர் அளவுக்கு உயர்வார்.. இது சத்தியம் சத்தியம் சத்தியம் என்று இசையமைப்பாளர் தேவா கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த திரையுலக உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட அவர் இடையில் செய்தியாளரிடம் பேசுகையில், வஞ்சக சூழ்ச்சி காரணமாக அம்மாவை கைது செய்து உள்ளே வைத்துள்ளனர். தர்ம தேவதைக்கே அநீதியா.. என்ன சார் இது. இது அநியாயம் சார்.
அவரது வளர்ச்சி சூழ்ச்சியாளர்களுக்குப் பிடிக்கவில்லை சார். அவரை ஜெயிக்க முடியவில்லை. தாண்டிப் போக முடியவில்லை. வெறுப்பும், வயிற்றெரிச்சலும்தான் இதற்குக் காரணம்.
அவர் தர்மதேவதை. தெய்வத்தை எப்படி மனிதன் தண்டிக்க முடியாதோ அதேபோலத்தான் ஜெயலலிதா அவர்களையும் தண்டிக்க முடியாது.
இதையெல்லாம் தகர்த்தெறிந்து மீண்டும் அவர் முதல்வராக வருவார். இவ்வளவு பேருடைய பிரேயரும் அவரை வெளியில் கொண்டு வந்தே தீரும். அவர் சாதித்துத்தான் ஆவார். பிரதமர் ஆவார். இது சத்தியம் சத்தியம் சத்தியம் என்று கூறினார் தேவா.