Don't Miss!
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
'தேவி'க்காக தூக்கமில்லாமல் கஷ்டப்பட்டது வீண் போகவில்லை: விஜய்
சென்னை: தேவி படத்திற்காக தூக்கம் இல்லாமல் கஷ்டப்பட்டது வீண் போகவில்லை என இயக்குனர் ஏ.எல். விஜய் தெரிவித்துள்ளார்.
ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா, சோனு சூத் உள்ளிட்டோர் நடித்த தேவி படம் கடந்த 7ம் தேதி வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. தேவி தமிழ் தவிர தெலுங்கு மற்றும் இந்தியிலும் வெளியானது.
மூன்று மொழிகளிலுமே படம் வெற்றி பெற்றுள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார்.
வெற்றி, தோல்வி
திரையுலகில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். ஆனால் தொடர்ந்து தோல்வியை தழுவினால் படைப்பாளிகளுக்கு சோர்வு ஏற்பட்டுவிடும். அண்மையில் எனக்கு சில பிரச்சனைகள் ஏற்பட்டன என்கிறார் விஜய்.
தேவி
பிரச்சனைகள் ஏற்பட்டாலும் மனதை ஒருநிலைப்படுத்தி தேவி படத்திற்காக கஷ்டப்பட்டேன். என கடின உழைப்பு வீண் போகவில்லை. அதற்கான பலனாக படம் மூன்று மொழிகளிலும் வெற்றி பெற்றுள்ளது என விஜய் தெரிவித்துள்ளார்.
மகிழ்ச்சி
தேவி படம் பட்டி தொட்டியெல்லாம் நன்றாக ஓடுவதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வெற்றி கண்டிப்பாக தேவை என்ற நேரத்தில் எனக்கு தேவி மூலம் வெற்றி கிடைத்துள்ளது. இதற்கு காரணமானவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என விஜய் கூறியுள்ளார்.
கஷ்டம்
தேவி படத்தை ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் எடுத்ததால் இரவு, பகல் பார்க்காமல் தூக்கமில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டதாக விஜய் முன்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.