Don't Miss!
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Sports இன்னும் ஒரு வாரம்.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு? 3 வீரர்களை கழற்றிவிடும் ரோகித் சர்மா
- News வலது கை விரலில் தான் ‘மை’ வைக்கணும்.. வாக்குச்சாவடியில் அடம் பிடித்த கோவை நபர்.. விசாரித்ததில் ஷாக்
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
விஜய்யின் புலி பாடலை இளையராஜாவுக்கு சமர்ப்பித்த தேவிஸ்ரீபிரசாத்!
விஜய் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் புதிய படமான புலியின் முதல் பாடலை இளையராஜாவுக்கு சமர்ப்பிப்பதாக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தெரிவித்தார்.
விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை சிம்பு தேவன் இயக்கியிருக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார்.
படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஏண்டி ஏண்டி' என்னும் பாடலை விஜய்யும், ஸ்ருதிஹாசனும் பாடி இருந்தார்கள். இந்த பாடலின் டீசர் நேற்று வெளியானது. இந்த டீசரில் தேவிஸ்ரீ பிரசாத் இந்த பாடல் குறித்து பேசுகையில், "என்னுடைய இசையில் விஜய்யும், ஸ்ருதிஹாசனும் ‘ஏண்டி ஏண்டி' என்னும் பாடலை பாடியிருக்கிறார்கள்.
மிகவும் மெலோடியான இந்த பாடல் அருமையாக வந்திருக்கிறது. நான் தீவிர கிட்டார் பிரியன். கிட்டார் இசையில் மிகவும் ரொமான்டிக்கான பாடலை உருவாக்கியிருக்கிறேன். இந்த பாடலை இசைஞானி இளையராஜாவுக்கு சமர்பிக்கிறேன். இந்த பாடல் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்," என்று குறிப்பிட்டுள்ளார்.