Don't Miss!
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Sports உன் ஓவரில் 6 சிக்சர் அடிக்கிறேன் பார்க்குறியா? மனைவியுடன் கிரிக்கெட் விளையாடிய CSK கேப்டன் ருதுராஜ்
- News நாங்க ஆகம விதி நிபுணர்கள் அல்ல.. பிடிஆர் தாயிடம் செங்கோல் தர எதிர்க்கும் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விஜய்யின் புலி பாடலை இளையராஜாவுக்கு சமர்ப்பித்த தேவிஸ்ரீபிரசாத்!
விஜய் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் புதிய படமான புலியின் முதல் பாடலை இளையராஜாவுக்கு சமர்ப்பிப்பதாக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தெரிவித்தார்.
விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை சிம்பு தேவன் இயக்கியிருக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார்.
படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஏண்டி ஏண்டி' என்னும் பாடலை விஜய்யும், ஸ்ருதிஹாசனும் பாடி இருந்தார்கள். இந்த பாடலின் டீசர் நேற்று வெளியானது. இந்த டீசரில் தேவிஸ்ரீ பிரசாத் இந்த பாடல் குறித்து பேசுகையில், "என்னுடைய இசையில் விஜய்யும், ஸ்ருதிஹாசனும் ‘ஏண்டி ஏண்டி' என்னும் பாடலை பாடியிருக்கிறார்கள்.
மிகவும் மெலோடியான இந்த பாடல் அருமையாக வந்திருக்கிறது. நான் தீவிர கிட்டார் பிரியன். கிட்டார் இசையில் மிகவும் ரொமான்டிக்கான பாடலை உருவாக்கியிருக்கிறேன். இந்த பாடலை இசைஞானி இளையராஜாவுக்கு சமர்பிக்கிறேன். இந்த பாடல் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்," என்று குறிப்பிட்டுள்ளார்.