என்னது தேவிஸ்ரீ பிரசாத்திற்கு சிவ பெருமான் காட்சி கொடுத்தாரா ?
சென்னை : தமிழ், தெலுங்கு என பலமொழிகளிலும் புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருக்கும் தேவிஸ்ரீ பிரசாத், தனது ஆன்மிக நம்பிக்கை குறித்த பதிவுகளை அடிக்கடி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, லைக்குகளை அள்ளி வருவது வழக்கம்
அப்படி நேற்று ஒரு பதிவை வெளியிட்டார். அதில், கிட்டதட்ட சிவ பெருமானின் உருவம் போன்ற தோற்றத்தை தான் வானத்தில் கண்டதாக தேவிஸ்ரீ பிரசாத், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபோட்டோவுடன் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

அந்த ஃபோட்டோவுடன் அவர் பதிவிட்டுள்ள கேப்ஷனில், சிவன் வானத்தில் இரக்கிறார். இந்த கொடிய பெருந்தொற்றில் இருந்து உலலை காக்க சிவ பெருமான் வந்து கொண்டிருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார். தேவிஸ்ரீ பிரசாத்தின் இந்த பதிவிற்கு கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.
கொரோனாவின் தாக்கம் எப்போது முடிவுக்கு வருமோ னெ உலகமே பயந்து கொண்டிருக்கும் நிலையில், தேவிஸ்ரீ பிரசாத்தின் இந்த பதிவு நம்பிக்கை தருவதாகவும், கடவுளின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்துவதாக உள்ளதாகவும் பலர் தெரிவித்துள்ளனர்.
தெலுங்கில் உபன்னா, ரவுடி பாய்ஸ் போன்ற படங்களின் வெற்றித் தொடர்ந்து தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படத்திற்காக தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இந்த ஆண்டு இறதியில் புஷ்பா 2 படமும் ரிலீசாக உள்ளதாம். கில்லாடி, எஃப் 2, பவன் கல்யாணின் 28 வது படம் என பல முன்னணி ஸ்டார்களின் படங்களுக்கு இசையமைப்பதில் பிஸியாக இருந்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











