Don't Miss!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- News முட்டையை உடைத்து ஆப்ஃபாயில் போடாதீங்க! போலீஸ் பிடிக்கும்.. சேலத்தில் நடந்ததை பாருங்க
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
திரைத் துளி
கோடம்பாக்கத்தின் புது மணத் தம்பதிகளான டைரக்டர் ராஜகுமாரன் - நடிகை தேவயானி ஜோடியை கண்ணீர்மல்க ஆசீர்வதித்தார் டைரக்டரின் தாய்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகை தேவயானியும், டைரக்டர் ராஜகுமாரனும் திடீர் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு பிறகு புகுந்தவீட்டைக் காண நடிகை தேவயானி, கணவர் ராஜகுமாரனுடன் அந்தியூர் பயணமானார்.
தவிட்டுப் பாளையம் சென்ற அவர்கள், ராஜகுமாரனின் தாய் வீட்டிற்குச் சென்றனர். அங்கு மகனையும், மருமகள் தேவயானியையும் கண்ட அய்யம்மாள்கண்ணீர் விட்டார். உடனே, அய்யம்மாளின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர் புது மணத் தம்பதிகள்.
பலகாரக்கடை நடத்தி வந்த அய்யம்மாள், தன் மகனைப் பற்றியும், தன்னைப் பற்றியும் செய்திகள் வெளியே வந்தபிறகு பலகாரக் கடை விற்பனையைமுற்றிலும் நிறுத்தி விட்டார்.
ராஜகுமாரனின் தம்பியும் லாரி கிளீனர் வேலையை விட்டு விட்டு வீட்டில் உள்ளார். இவர்கள் எல்லோரும் மொத்தமாக சென்னையில் செட்டிலாகத்திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.
தாயிடம் ஆசி பெற்ற ராஜகுமாரன், நேராக தனது பழைய முதலாளி கோபால் செட்டியார் வீட்டிற்குச் சென்று ஆசி வாங்கினார். பின்னர் இருவரும்தங்கள் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வழிபட்டனர்.
அடுத்து இவர்கள் அந்தியூர் பத்திரகாளியம்மன் கோயில், பாரியூர் அம்மன்கோயில் போன்ற கோயில்களுக்குச் சென்று வழிபட முடிவு செய்துள்ளனர்.