கபாலிக்குப் பிறகு தன்ஷிகா நடிக்கும் ராணி... இசை இளையராஜா!
ரஜினியுடன் கபாலியில் நடித்த பிறகு தன்ஷிகாவுக்கு ஏக டிமான்ட் கோலிவுட்டில். ஆனால் வந்த வாய்ப்புகளை எல்லாம் ஏற்காமல் செலக்டிவாக ஒப்புக் கொள்கிறார்.
அப்படி அவர் ஒப்புக் கொண்டுள்ள புதிய படம் ராணி. இ

எம் கே.பிலிம்ஸ் சார்பில் சி முத்துகிருஷ்ணன் தயாரிக்கும் இந்தப் படத்தை சமுத்திரகனியின் இணை இயக்குனர் எஸ் பாணி இயக்குகிறார்.

இப்படத்திற்கு ஏ.குமரன் மற்றும் எஸ் .ஆர் சந்தோஷ்குமார் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக 40 நாட்கள் மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் மற்றும் கேமரூன் ஹைலேண்ட் ல் நடந்து முடிந்துள்ளது. படத்தின் டப்பிங் பணிகள் நேற்று பூஜையுடன் சென்னையில் உள்ளபிரசாத் லேப் ஸ்டுடியோவில் துவங்கியது.


Click it and Unblock the Notifications











