Don't Miss!
- Finance Infosys: லாபத்தில் 30% உயர்வு, முதலீட்டாளர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் ரூ.28 ஈவுத்தொகை..!
- News மசூதியை நோக்கி அம்பு விடுவது போல சைகை செய்த ஹைதராபாத் பாஜக வேட்பாளர்! எதிர்ப்பால் மன்னிப்பு கோரினார்
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Automobiles 35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
- Technology போட்டு தாக்கும் BSNL.. 300 ரூபாய்க்கு இப்படியொரு ரீசார்ஜ் திட்டமா? யாருக்கெல்லாம் இது பெஸ்ட் பிளான் தெரியமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரஜினியிடம் கேட்கவில்லை... நஷ்ட ஈடு தர தனுஷ், ஐஸ்வர்யா ஒப்புக் கொண்டனர் - நட்டி குமார்
தனுஷ், ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடித்த '3' படத்தின் தெலுங்கு உரிமையை பெரிய தொகைக்கு வாங்கி வெளியிட்டார் நட்டி குமார் என்பவர்.
ஆனால் தெலுங்கில் படம் எதிர்பார்த்தபடி ஓடாமல் நஷ்டம் அடைந்துவிட்டது. இந்த நட்டத்தை ரஜினி ஈடுகட்டுவார் என நட்டி குமார் கூறியதாக ஒரு பத்திரிகை செய்தி வெளியிட, அது பரபரப்பைக் கிளப்பியது.
இதைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ரஜினி அறிக்கை விட வேண்டி வந்தது. மேலும் தனுஷும், ரஜினிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என அறிக்கை விட்டார்.
இந்த நிலையில் நட்டி குமார் மீண்டும் பேட்டியளித்தார். அவர் கூறுகையில், "ஆந்திராவில் 3 படத்தை வாங்கி நான் வெளியிட்டேன். படம் தோல்வி அடைந்ததால் 80 சதவீதம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ரஜினியிடம் நஷ்ட ஈடு கேட்பேன் என்று நான் கூறவில்லை. ரஜினி உதவுவார் என எதிர்ப்பார்ப்பதாகத்தான் கூறினேன்.
ரஜினி இந்த படத்தின் விநியோகத்தில் தனக்கு சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளார். சினிமாவில் நஷ்டம் ஏற்படுவது சாதாரண விஷயம்தான். ஆனால் 3 படத்தில் பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளோம்.
இந்த படத்தை 6.5 கோடி செலவில் தயாரித்தனர். கொலவெறி பாடலை வைத்து ரூ.50 கோடிக்கு விற்றுவிட்டார்கள். படத்தின் தயாரிப்பாளர் கஸ்தூரிராஜாவை எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. தனுஷும், ஐஸ்வர்யாவும் உங்கள் நஷ்டத்தை ஈடுகட்டுகிறோம். எவ்வளவு தொகை வசூலானது என்று விவரங்களை அனுப்பி வையுங்கள் என்று கூறியுள்ளனர். அவர்கள் இப்படி ஆறுதலாக சொன்னது சந்தோஷமாக இருக்கிறது. எவ்வளவு நஷ்டஈடு கொடுப்பார்கள் என்று தெரியவில்லை. கொடுப்பதைக் கொடுக்கட்டும்," என்றார்.
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?