Don't Miss!
- News
எல்லாம் நடிப்பா கோபால்ல்ல்? "கல்ப சமாதி" நிலைக்கு போன நித்தியானந்தா! பின்னணியில் ஆபரேஷன் கைலாஸா?
- Lifestyle
தேனில் பெருங்காயத் தூளை கலந்து சாப்பிடுவதால் உடலினுள் நிகழும் அற்புதங்கள் குறித்து தெரியுமா?
- Sports
புதிய தலைமை பயிற்சியாளராக லக்ஷ்மண் நியமனம்.. இந்திய அணியில் அதிரடி திருப்பம்.. காரணம் என்ன?
- Finance
2 நிமிடங்களில் கடனுக்கான ஒப்புதல்.. ஹெச்டிஎஃப்சி கொடுத்த சூப்பர் அறிவிப்பு..!
- Automobiles
டாடா விற்கு தலைவலியை உருவாக்கும் ஹூண்டாய்... அடுத்த வருசம் இருக்குது பெரிய வேட்டை...
- Technology
மழையாக பொழிந்த மர்ம உலோக பந்து- பதற்றத்தில் குஜராத் கிராம வாசிகள்: சம்பவ இடத்துக்கு வந்த ஆராய்ச்சி குழு!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இரண்டு ஆளுமைகள் பங்கேற்ற தனுஷ்- ஐஸ்வர்யா திருமணம்
தனுஷ்- ஐஸ்வர்யா திருமணம் சர்ச்சையில் ஆரம்பித்தது, ஆனால் சுபமாக யாருமே எதிர்பாராத அளவுக்கு சிறப்பாக நடந்தது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காலையிலேயே வந்து தாலி எடுத்துக்கொடுக்க திருமணம் நடந்தது. மாலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி கலந்துக்கொண்டார். இரண்டும் மகன்கள் உள்ள நிலையில் பிரிகின்றனர்.

தனுஷ் - ஐஸ்வர்யா திருமணம்
நடிகர் ரஜினிகாந்தின் மூத்தமகள் ஐஸ்வர்யா திருமணம் திடீரென தனுஷுடன் என முடிவானது. அப்போது சில பிரச்சினைகள் அவரது திருமணம் நடக்குமா என்கிற நிலைக்கு ரஜினி குடும்பத்தை தள்ளியது. அதே நேரம் ரஜினியின் நிலைப்பாட்டிலும் ஐஸ்வர்யா திருமணத்தை வைத்து சில மாற்றங்கள் ஏற்பட்டது.

ஜெயலலிதாவுடன் கடும் மோதலில் இருந்த ரஜினி
1991-96 காலக்கட்டத்தில் கடுமையாக ஜெயலலிதாவுடன் மோதலில் ஈடுபட்டிருந்த ரஜினி 1996 ஆம் ஆண்டு ஜெயலலிதா தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். அதனால் ஜெயலலிதா கடும் கோபத்தில் இருந்தார். பின்னர் 98 லிம் அதிமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். அதன் பின்னர் ரஜினி வாய்ஸ் கொடுக்கவில்லை. ஒதுங்கியே ஒருந்தார். 2001 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். இம்முறை அவரும் நிதானப்பட்டிருந்தார்.

ஜெயலலிதாவுடன் இணக்கமான ரஜினி
இந்தக்காலக்கட்டத்தில் ரஜினியும் ஜெயலலிதா எதிர்ப்பை கைவிட்டிருந்தார். ஜெயலலிதாவுக்கு நடந்த பாராட்டு விழாவில் தைரிய லட்சுமி என வாழ்த்தியிருந்தார். இந்நிலையில் தனுஷ் ஐஸ்வர்யா திருமண ஏற்பாடுகள் நடந்தது. சசிகலா மூலம் ரஜினிகாந்த் ஜெயலலிதாவை சந்திக்க நேரம் கேட்க அவரும் இறங்கி வந்து நட்புக்கரம் நீட்டினார். தனது மகள் திருமணத்திற்கு ரஜினி அழைப்பு விடுத்தார். இதன்மூலம் ரஜினி ஜெயலலிதா மோதல் முடிவுக்கு வந்தது.

ஜெயலலிதா தாலி எடுத்துக்கொடுக்க நடந்த திருமணம்
ஜெயலலிதாவை தனது குடும்பத்தின் மூத்த உறுப்பினர்போல் முகூர்த்தத்திற்கு ரஜினி அழைக்க அவர் வந்தி திருமணத்தாலியை எடுத்துக்கொடுக்க தனுஷ் தாலி கட்டினார். மாலையில் நடந்த ரிஷபஷனில் கருணாநிதி கலந்துக்கொண்டார். ஜெயலலிதா, கருணாநிதி இரு ஆளுமைகள் வாழ்த்த நடந்த திருமணம் முறிவில் முடிந்துள்ளது.

சௌந்தர்யாவும் மணமுறிவுக்கு பின் மறுமணம் செய்துள்ளார்
18 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் இரண்டு பிள்ளைகள் இருவருக்கும் உள்ளனர். இந்நிலையில் இருவரும் பிரிவதாக அறிவுத்துள்ளது ரஜினி குடும்பத்தார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே சௌந்தர்யாவும் மணவிலக்கு பெற்று பின்னர் மறுமணம் செய்தது குறிப்பிடத்தக்கது.
-
ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன், பூஜா ஹெக்டே.. களைகட்டும் கான்ஸ் திரைப்பட விழா.. ரசிகர்கள் மகிழ்ச்சி!
-
எங்க அப்பா காலும் அப்படித்தான் இருக்கும்.. கதை கேட்டதுமே கதறி அழுதுட்டேன்.. டான் அம்மா நெகிழ்ச்சி!
-
சித்ரா கிட்ட அதை பண்ண சொன்னேன் அவ கேட்கல.. அவ தற்கொலை பண்ணிக்கல கொலை தான்.. ரேகா நாயர் பகீர்!