Don't Miss!
- Sports கேமரா மேனை சிக்சரால் பதம் பார்த்த ரிஷப் பண்ட்.. விசயம் தெரிந்த உடன் பண்ட் செய்த நெகிழ்ச்சி சம்பவம்
- News தோசைக்கு ஏன் ‛தோசை’னு பெயர் வந்தது தெரியுமா? அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே! சுவாரசியம்
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கன்னடத்துப் பக்கமும் கண்ணு வெச்சுட்டார் நடிகர் தனுஷ்!
சென்னை : நடிகராக கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என தனது எல்லையை விரிவுபடுத்திக் கொண்டேயிருக்கும் நடிகர் தனுஷ், அதே போல தனது தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் நிறுவனத்தையும் மற்ற மொழிகளில் கிளை பரப்ப முடிவு செய்துள்ளார்.
சமீபத்தில், மலையாளத்தில் அறிமுக இயக்குனர்களை வைத்து, 'தரங்கம்' மற்றும் 'மரடோனா' என இரண்டு படங்களை தயாரித்து, அதில் 'தரங்கம்' படத்தை ரிலீஸும் செய்து விட்டார். அந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
தற்போது அடுத்த முயற்சியாக கன்னட திரையுலகம் பக்கம் அவரது பார்வை திரும்பியுள்ளது. கன்னட தயாரிப்பாளர் ஜேக்கப் வர்கீஸ் என்பவருடன் இணைந்து கன்னடத்தில் புதிய படமொன்றை தயாரிக்க இருக்கிறார் தனுஷ்.
இந்தப்படத்தில் கதாநாயகனாக ரிஷி என்பவர் நடிக்க இருக்கிறார். இவர் சூப்பர் ஹிட்டான 'ஆபரேசன் அலமேலம்மா' படத்தின் மூலம் பிரபலமானவர். குறுகிய காலத்திற்குள் பல வெற்றிப்படங்களைக் கொடுத்து வரும் வுண்டர்பார் நிறுவனம் மூலம் தனுஷ் தயாரிப்பாளராகவும் வெற்றிபெற்று வருகிறார்.