Don't Miss!
- Lifestyle திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
கன்னடத்துப் பக்கமும் கண்ணு வெச்சுட்டார் நடிகர் தனுஷ்!
சென்னை : நடிகராக கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என தனது எல்லையை விரிவுபடுத்திக் கொண்டேயிருக்கும் நடிகர் தனுஷ், அதே போல தனது தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் நிறுவனத்தையும் மற்ற மொழிகளில் கிளை பரப்ப முடிவு செய்துள்ளார்.
சமீபத்தில், மலையாளத்தில் அறிமுக இயக்குனர்களை வைத்து, 'தரங்கம்' மற்றும் 'மரடோனா' என இரண்டு படங்களை தயாரித்து, அதில் 'தரங்கம்' படத்தை ரிலீஸும் செய்து விட்டார். அந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
தற்போது அடுத்த முயற்சியாக கன்னட திரையுலகம் பக்கம் அவரது பார்வை திரும்பியுள்ளது. கன்னட தயாரிப்பாளர் ஜேக்கப் வர்கீஸ் என்பவருடன் இணைந்து கன்னடத்தில் புதிய படமொன்றை தயாரிக்க இருக்கிறார் தனுஷ்.
இந்தப்படத்தில் கதாநாயகனாக ரிஷி என்பவர் நடிக்க இருக்கிறார். இவர் சூப்பர் ஹிட்டான 'ஆபரேசன் அலமேலம்மா' படத்தின் மூலம் பிரபலமானவர். குறுகிய காலத்திற்குள் பல வெற்றிப்படங்களைக் கொடுத்து வரும் வுண்டர்பார் நிறுவனம் மூலம் தனுஷ் தயாரிப்பாளராகவும் வெற்றிபெற்று வருகிறார்.