விஐபி 3, மெகா பட்ஜெட் படம், பாலிவுட்: ரொம்ப பெரிதாக திட்டம் போடும் தனுஷ்
சென்னை: தனுஷ் தான் இயக்கும் இரண்டாவது படம் குறித்து பெரிதாக திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்.
நடிகராக கோலிவுட்டுக்கு வந்த தனுஷ் தற்போது பாடல் ஆசிரியர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குனராக உள்ளார். பாலிவுட் பக்கம் சென்ற தனுஷ் ஹாலிவுட் படத்திலும் நடித்துவிட்டார்.
இரண்டாவது படத்தை இயக்கவும் தயாராகி வருகிறார்.

தனுஷ்
ஆனந்த் எல் ராயின் ராஞ்ஹனா படம் மூலம் தான் தனுஷ் பாலிவுட்டில் அறிமுகம் ஆனார். இந்நிலையில் அவர் மீண்டும் ஆனந்த் எல் ராயின் படத்தில் நடிக்க உள்ளாராம்.

லாபம்
விஐபி 2 படம் ஹிட்டானதால் அதன் மூன்றாம் பாகத்தை எடுக்கும் திட்டம் வைத்துள்ளார் தனுஷ். விஐபி 3 படம் நிச்சயம் வரும் என்று தனுஷ் தெரிவித்துள்ளார். விஐபி 2 போன்று மூன்றாம் பாகத்தையும் சவுந்தர்யாவே இயக்குவாரா என்று தெரியவில்லை.

மெகா பட்ஜெட்
ப. பாண்டியை அடுத்து புதுப்படம் இயக்க தனுஷ் தயாராகி வருகிறார். முதல் படத்தை போன்று இல்லாமல் இந்த படத்தை பெரிய பட்ஜெட்டில் எடுக்க முடிவு செய்துள்ளார் தனுஷ். அவரே இயக்கி அவரே ஹீரோவாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.

ரூ. 70 கோடி
ரூ. 100 கோடி செலவில் படத்தை இயக்க முடிவு செய்து தற்போது ரூ. 70 கோடிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளார் தனுஷ். படப்பிடிப்பை துவங்கும் முன்பு சரியான திட்டமிடல் இருந்தால் படத்தை இயக்குவது மிகவும் எளிது என்கிறார் தனுஷ்.


Click it and Unblock the Notifications











