Don't Miss!
- News வெறிச்சோடிய சென்னை சாலைகள்.. எல்லா பக்கமும் காலி ரோடு.. இதுதான் காரணமா? ஓட்டுப்பதிவு நாளில் இப்படியா
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
மெர்சலுக்கு பிறகு தனுஷுடன் களத்தில் குதித்த தயாரிப்பாளர்..!
தனுஷ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது
சென்னை: நடிகர் தனுஷ் அடுத்ததாக இயக்கும் திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் என பல தளங்களில் தடம் பதித்து வருகிறார் தனுஷ். தனுஷுக்கு அடுத்ததாக என்னை நோக்கி பாயும் தோட்டா மற்றும் வடசென்னை திரைப்படங்கள் ரிலீசுக்கு வரிசைகட்டி நிற்கின்றன. இந்த நிலையில் அவர் ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல் பரவியது.
இந்த தகவலை தேனாண்டாள் பிலிம்ஸ் ஹேமா ருக்மணி இப்போது உறுதிபடுத்தியுள்ளார். மெர்சல் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தை தனுஷ் இயக்குகிறார்.
தற்போது டிடி 2 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தனுஷ் இயக்கி நடிக்கிறார். இப்படத்தில் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் படங்களில் நடித்துள்ள அதித்தி ராவ் ஹைதரி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இவர்களுடன், எஸ்ஜே.சூர்யா ஸ்ரீகாந்த், சரத்குமார் என நட்சத்திரக் குவியல் உள்ளது. ஜோக்கர் படத்திற்கு இசையமைத்த ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படம் ஒரு பீரியட் ஃபிலிமாக தயாராக உள்ளது. தனுஷின் இயக்கத்தில் வெளியான பா பாண்டி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. அதனால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது.