தனுஷின் இந்திப் படத்துக்கு தலைப்பு என்ன தெரியுமா?
தனுஷ் நடிக்கும் புதிய இந்திப் படத்துக்கு ஷமிதாப் என தலைப்பு சூட்டியுள்ளார் இயக்குநர் பால்கி.
ராஞ்ஜனாவுக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் புதிய இந்திப் படம் இது. அமிதாப் பச்சன் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அக்ஷரா ஹாஸன் தனுஷுக்கு ஜோடியாக இந்தப் படத்தில் அறிமுகமாகிறார்.

இசையமைப்பவர் இளையராஜா.
படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்துவிட்டாலும், இதற்கு தலைப்பு மட்டும் வைக்காமல் இருந்தனர்.
இப்போது படத்துக்கு ஷமிதாப் என தலைப்பு வைத்துள்ளனர்.
இதுகுறித்து இயக்கநர் பால்கி கூறுகையில், "இந்தப் படத்துக்கு ஷமிதாப் என்று தலைப்பு சூட்டியுள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். கிட்டத்தட்ட பாதி படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அமிதாப் - தனுஷ் - அக்ஷரா கூட்டணி மிகச்சிறப்பாக வந்துள்ளது," என்றார்.
அமிதாப் பச்சன் கூறுகையில், "இந்தப் படத்தின் தலைப்புக்கும் என் பெயருக்கும் சம்பந்தமில்லை. ஏன் இப்படி ஒரு தலைப்பு வைத்துள்ளார்கள் என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்," என்று கூறியுள்ளார்.
இந்தப் படத்தின் கதை சுவாரஸ்யமானது. பேச முடியாத ஒருவன் பெரிய நட்சத்திரமாக விரும்புவதுதான் கதையின் ஒன்லைன்!


Click it and Unblock the Notifications











