Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இணையத்தில் 10 கோடி பார்வைகளைத் தாண்டியது 'வொய் திஸ் கொலவெறி'
சென்னை: இணையதளத்தில் சுமார் 10 கோடி பார்வைகளைத் தாண்டி சாதனை படைத்திருக்கிறது 3 படத்தில் இடம்பெற்ற 'வொய் திஸ் கொலவெறி டி' பாடல்.
தனுஷ், சுருதிஹாசன், சிவகார்த்திகேயன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2012 ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளிவந்த இப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக மாறினார். இதே போன்று இன்றைக்கு முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகத் திகழும் அனிருத்தின் இசைப்பயணமும் இந்தப் படத்தில் தான் ஆரம்பமாகியது.
Yes we know there r too many zeroes 2 count!Thx 2 all the fans & listeners who made it possible! #Kolaveri100MViews pic.twitter.com/bLyLcd3gGE
— Sony Music India (@sonymusicindia) December 2, 2015
இந்தப் படத்தில் இடம்பெற்ற வொய் திஸ் கொலவெறி என்ற பாடலை படத்தின் நாயகன் தனுஷ் எழுதி அவரே பாடியிருந்தார். இளைஞர்களின் மனங்கவர்ந்த இந்தப் பாடல் தற்போது எந்தவொரு இந்தியப் படமும் செய்யாத சாதனையை செய்திருக்கிறது.
ஆமாம் இணையதளத்தில் சுமார் 10 கோடிப் பேருக்கும் அதிகமானோர் பார்க்கப்பட்ட பாடலாக இப்பாடல் மாறியிருக்கிறது. இப்பாடல் வெளிவந்து சரியாக 4(November, 2011) வருடங்களில் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.
இணையதளத்தில் 10 கோடி பார்வைகளைத் தாண்டிய முதல் இந்திய பாடல் 'வொய் திஸ் கொலைவெறி' என்பது குறிப்பிடத்தக்கது.