Don't Miss!
- News ஓட்டு போட சொந்த ஊர் போனவங்களுக்கு வந்த குட்நியூஸ்.. சென்னைக்கு இன்று முன்பதிவில்லா ஸ்பெஷல் ரயில்
- Finance சென்னை லயோலா-வில் படித்த அஜித்.. பெங்களூரிலேயே காஸ்ட்லியான இடத்தை வாங்கியிருக்கிறார்.. யார் இவர்..?
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மறைந்த நடிகர் ரகுவரனுக்கு அஞ்சலி... வேலையில்லாப் பட்டதாரி படத்தில் தனுஷ் பெயர் ரகுவரன்!
சென்னை: மறைந்த வில்லன் நடிகர் ரகுவரனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவே வேலையில்லாப் பட்டதாரி படத்தில் தனுஷ் கதாபாத்திரத்துக்கு ரகுவரன் எனப் பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் தனுஷின் 25வது படம் வேலையில்லாப் பட்டதாரி. இப்படம் கடந்தவாரம் ரிலீசானது. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கிய இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார்.
இப்படத்தில் தனுஷின் கதாபாத்திரத்தின் பெயர் ரகுவரன்.
யாரடி நீ மோகினி...
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியான 'யாரடி நீ மோகினி' படத்தில் தனுஷும், ரகுவரனும் அப்பா,மகனாக நடித்திருந்தனர். அப்படத்தில் பாதியிலேயே ரகுவரன் இறந்து விடுவார். அப்படம் வெளிவருவதற்குள்ளாகவே ரகுவரன் நிஜத்திலும் காலமானார்.
அப்பா - மகன்...
இப்படத்தில் தனுஷ் -ரகுவரன் கதாபாத்திரங்கள் மிகவும் இயல்பாக அமைக்கப்பட்டிருந்தது. எனவே, ரசிகர்கள் மனதில் ஆழப் பதிந்தது.
அஞ்சலி....
வேலையில்லாப் பட்டதாரி படத்தில் தனுஷ் கதாபாத்திரத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என யோசித்தபோது ரகுவரனை நினைவு கூறும் வகையில் அவரது பெயரை வைக்க தீர்மானிக்கப்பட்டதாம்.
தனுஷின் பஞ்ச்...
ரகுவரன் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தே புகழ் பெற்றவர். எனவே, இப்படத்தில் ‘ரகுவரனை வில்லனாதானே பார்த்திருப்ப, ஹீரோவா பார்த்ததில்லையே. இனிமே பார்ப்ப...' என தனுஷ் பேசுவது போன்று ஒரு வசனம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.