Don't Miss!
- Sports தோனி எடுத்த மிகப் பெரிய முடிவு! சிஎஸ்கே ரசிகர்களின் வேண்டுதல் நிறைவேற போகுது?LSGபோட்டியில் சர்ப்ரைஸ்
- News லோக்சபா தேர்தல்: தமிழ்நாட்டில் "அதிக முறை" சரித்திரம் படைத்தவர்கள் யார் யார் தெரியுமா? இதோ லிஸ்ட்!
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Lifestyle ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகிறீர்களா? இந்த 5 ஆயுர்வேத வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க...!
- Automobiles பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மறைந்த நடிகர் ரகுவரனுக்கு அஞ்சலி... வேலையில்லாப் பட்டதாரி படத்தில் தனுஷ் பெயர் ரகுவரன்!
சென்னை: மறைந்த வில்லன் நடிகர் ரகுவரனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவே வேலையில்லாப் பட்டதாரி படத்தில் தனுஷ் கதாபாத்திரத்துக்கு ரகுவரன் எனப் பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் தனுஷின் 25வது படம் வேலையில்லாப் பட்டதாரி. இப்படம் கடந்தவாரம் ரிலீசானது. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கிய இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார்.
இப்படத்தில் தனுஷின் கதாபாத்திரத்தின் பெயர் ரகுவரன்.
யாரடி நீ மோகினி...
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியான 'யாரடி நீ மோகினி' படத்தில் தனுஷும், ரகுவரனும் அப்பா,மகனாக நடித்திருந்தனர். அப்படத்தில் பாதியிலேயே ரகுவரன் இறந்து விடுவார். அப்படம் வெளிவருவதற்குள்ளாகவே ரகுவரன் நிஜத்திலும் காலமானார்.
அப்பா - மகன்...
இப்படத்தில் தனுஷ் -ரகுவரன் கதாபாத்திரங்கள் மிகவும் இயல்பாக அமைக்கப்பட்டிருந்தது. எனவே, ரசிகர்கள் மனதில் ஆழப் பதிந்தது.
அஞ்சலி....
வேலையில்லாப் பட்டதாரி படத்தில் தனுஷ் கதாபாத்திரத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என யோசித்தபோது ரகுவரனை நினைவு கூறும் வகையில் அவரது பெயரை வைக்க தீர்மானிக்கப்பட்டதாம்.
தனுஷின் பஞ்ச்...
ரகுவரன் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தே புகழ் பெற்றவர். எனவே, இப்படத்தில் ‘ரகுவரனை வில்லனாதானே பார்த்திருப்ப, ஹீரோவா பார்த்ததில்லையே. இனிமே பார்ப்ப...' என தனுஷ் பேசுவது போன்று ஒரு வசனம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.