Don't Miss!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- News "மேட்டர் ரொம்ப சீரியஸ்!" மீண்டும் இந்தியாவை சீண்டும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ! என்ன தான் நடக்குது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
தனுஷ், சிவகார்த்திகேயன் செய்த செயலால் ரசிகர்கள் அதிர்ச்சி
சென்னை: மவுன போராட்டத்தில் தனுஷ், சிவகார்த்திகேயன் செய்த காரியத்தை பார்த்து ரசிகர்களே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சின்னத் திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த சிவகார்த்திகேயனை வளர்த்து விட்டு அழகு பார்த்தவர் தனுஷ். பின்னர் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.
இதற்கிடையே தனுஷ் அனிருத்தையும் கழற்றிவிட்டார்.
அனிருத்
தனுஷை பிரிந்த பிறகு சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இசையமைப்பாளராக உள்ளார் அனிருத். இந்நிலையில் அடுத்த ஆண்டு மீண்டும் தனுஷுடன் சேர்ந்து பணியாற்றப் போவதாக தெரிவித்துள்ளார் அனிருத்.
எதிர்பார்ப்பு
தனுஷும், அனிருத்தும் சேரவிருப்பதை பார்த்த ரசிகர்கள் அப்படியே சிவகார்த்திகேயனும் சேர்ந்துவிட மாட்டாரா என்று எதிர்பார்த்தனர். இந்நிலையில் தான் இன்று அந்த அதிசயம் நடந்துள்ளது.
பேச்சு
காவிரி மற்றும் ஸ்டெர்லைட் விவகாரங்களுக்காக திரையுலகினர் நடத்திய மவுன போராட்டத்தில் சிவகார்த்திகேயனும், தனுஷும் அருகருகே அமர்ந்தது மட்டும் அல்லாமல் ஜாலியாக பேசிக் கொண்டனர்.
அதிர்ச்சி
தனுஷும், சிவகார்த்திகேயனும் பேசிக் கொண்டதை பார்த்தால் எதிரியாக இருப்பவர்கள் பேசுவது போன்று இல்லை. ரொம்ப நாட்களாக நண்பர்களாக இருப்பவர்கள் பேசுவது போன்று இருந்ததை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒன்றாக இருந்து கொண்டு ஊருக்கு முன்பு பிரச்சனை என ஏன் நடித்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.