Don't Miss!
- Lifestyle திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
சவுந்தர்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தனுஷ் கலந்து கொள்ளவில்லையா?
Recommended Video
சென்னை: சவுந்தர்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தனுஷ் கலந்து கொள்ளவில்லை என்று நினைக்க வேண்டாம்.
ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவின் திருமண கொண்டாட்டங்கள் 4 நாட்களாக நடந்து வருகின்றது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மூத்த மருமகன் தனுஷ் கலந்து கொள்ளவில்லை என்ற பேச்சு கிளம்பியது.
எந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களிலும் அவர் இல்லாததால் இப்படி பேசப்பட்டது.
சவுந்தர்யா ரஜினிகாந்தை மணந்த விசாகன்: முதல்வர் வந்தாக, கமல் வந்தாக, தனுஷ் வந்தாக, இன்னும்...
அசுரன்
மச்சினி திருமண வரவேற்பு நிகழ்ச்சியை தனுஷ் புறக்கணிக்கவில்லை. அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்து வரும் அசுரன் படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் லேட்டாக வந்துள்ளார்.
ரகசியம்
தனுஷ் அசுரன் படத்திற்காக தனது கெட்டப்பை மாற்றியுள்ளார். அந்த கெட்டப் வெளியே தெரியக் கூடாது என்பதற்காக தான் அவர் புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கவில்லை. மேலும் வீடியோ எடுக்கும் இடத்திலும் நிற்கவில்லை.
சவுந்தர்யா
சவுந்தர்யாவின் வாழ்வில் ஒரு நல்லது நடக்கும்போது அதை மிஸ் பண்ண தனுஷ் விரும்பவில்லை. அதே சமயம் தொழில் பக்தியால் தனது கெட்டப்பை ரகசியமாக வைக்க குடும்பத்தாருடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கவில்லை.
மாமனார்
மாமனார் ரஜினிகாந்த் போன்றே தனுஷும் தொழில் பக்தி அதிகம் உள்ளவர். அதனால் தான் திருமண கொண்டாட்டங்களில் ஓரமாக நிற்கிறார். தான் எந்த புகைப்படங்களிலும் இல்லாவிட்டால் இப்படி ஒரு பேச்சு கிளம்பும் என்பது அவருக்கு தெரியாமல் இல்லை. இருப்பினும் தொழில் முக்கியமாச்சே. அதனால் தான் அப்படி செய்துள்ளார்.