Don't Miss!
- Lifestyle திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
ஒரேயடியாக இறங்கி வந்த தனுஷ்: மாமா ரஜினி மனசு வைப்பாரா?
சென்னை: தனுஷ் தனது தயாரிப்பு நிறுவனத்தை மூடப் போவதாக வெளியான தகவல் குறித்து உண்மை தெரிய வந்துள்ளது. மேலும் அவர் ரஜினியை வைத்து படம் தயாரிக்கிறாரா இல்லையா என்பதும் தெளிவாகியுள்ளது.
தனுஷ் படங்களில் நடிப்பது தவிர்த்து தயாரிக்கவும் செய்கிறார். வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தொடர்ந்து படங்களை தயாரிக்கிறார். இந்நிலையில் தனுஷ் காலா படத்தை அடுத்து மீண்டும் மாமனார் ரஜினியை வைத்து படம் தயாரிக்கிறார் என்று செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இது குறித்து தனுஷ் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,
Raatchasi Review: 'சிஸ்டம் சரியில்ல.. எல்லாத்தையும் மாத்தணும்'.. ஒரு 'ராட்சசி'யின் அதிரடி அப்ரோச்!
வுண்டர்பார் பிலிம்ஸ்
எங்களின் தயாரிப்பு நிறுவனத்தை மூடப் போவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. நாங்கள் புதுப்படம் எதையும் அறிவிக்காததால் மக்களாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள் போன்று. பல தயாரிப்பாளர்கள் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு படங்களை தான் தயாரிப்பார்கள். அதற்காக அவர்களுக்கு வியாபாரம் சரியில்லை என்று அர்த்தம் இல்லை.
அறிவிப்பு
நாங்கள் இரண்டு ஸ்க்ரிப்டுகளை உறுதி செய்ய உள்ளோம். விரைவில் புதுப்படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். வெற்றி, தோல்வி என்பது தயாரிப்பில் சகஜம். எங்கள் தயாரிப்பு நிறுவனம் நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது. எங்கள் தயாரிப்பு நிறுவனம் நஷ்டத்தில் போகவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
ரஜினி
ரஜினி சாரை வைத்து நான் படம் தயாரிப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. ரஜினி சாருடன் சேர்ந்து மீண்டும் வேலை செய்ய ஆவலாக உள்ளோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தற்போதைக்கு இல்லை. ஏதாவது சுவாரஸ்யமான ஸ்க்ரிப்ட் வந்தால் நிச்சயம் ரஜினி சாரை அணுகுவோம். ரஜினி சாருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.
சூப்பர் ஸ்டார்
ரஜினி சாருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது அனைத்து நடிகர்களின் கனவு. ஒரேயொரு காட்சியில் அவருக்கு பின்னால் நின்றபடி நடித்தால் கூட போதும். பிற மொழி படங்களில் நடிப்பதில் சிரமம் இல்லை. நம்பிக்கை இருப்பதால் தைரியமாக நடிக்கிறேன் என்று தனுஷ் தெரிவித்துள்ளார். ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்கிற தனது ஆசையை நேரம் கிடைக்கும்போது எல்லாம் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார் தனுஷ். ஆனால் பாவம் அவரின் ஆசை இதுவரை நிறைவேறாமல் உள்ளது.