Don't Miss!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஓரேயோரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- News கோயிலில் பிரார்த்தனை செய்து பிரசாரத்தை தொடங்கிய செஞ்சி மஸ்தான்.. டீ போட்டு வாக்கு சேகரித்தார்
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
தனுசிடம் புதிய கதை சொன்னாரா வெற்றி?.. டிரெண்ட்டாகும் புகைப்படம்
சென்னை : அசுரன் 100 வது நாள் கொண்டாட்டத்தின் போதே தனுசிடம் வெற்றிமாறன் புதிய கதை ஒன்றை கூறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் தனுஷ் நடித்து வெற்றிமாறன் இயக்கி சமீபத்தில் நூறாவது நாள் கொண்டாடிய படம் தான் அசுரன். இந்த படம் மாபெரும் வெற்றி அடைந்து நூறாவது நாளை வெற்றி கரமாக கடந்து இருக்கிறது .நூறாவது நாளில் ரசிகர்களுக்காக ஸ்பெஷல் ஷோ சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் போடபட்டது .
இந்த படத்தை நூறாவது நாளில் ரசிகர்களுடன் பார்க்க படக்குழு ரோகினி திரையரங்கம் வந்திருந்தது. ரசிகர்கள் ஆரவாரமாக படக்குழுவை வாழ்த்தினர். அப்போது எடுக்கபட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆனது. பல புகைப்படங்களை படக்குழுவினரும் தற்போது வெளியிட்டு உள்ளனர் ரசிகர்களும் அதனை பகிர்ந்து வருகின்றனர்.
ரோகினி திரையரங்கமும் அவர்கள் சார்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவேற்றி சிலவற்றை கூறியிருந்தது. அந்த புகைப்படத்தில் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவரும் தீவிரமாக பேசிக்கொண்டு இருப்பது போல இருந்தது அந்த புகைப்படம். மற்ற படக்குழுவினருக்கு திரையரங்கிற்கு வந்திருந்தாலும் தனுஷ் மற்றும் வெற்றிமாறனின் அந்த புகைப்படத்தை மட்டும் பதிவேற்றியது ரோகினி திரையரங்கத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் .
Recommended Video
தனுசிடம் வெற்றிமாறன் அசுரனின் நூறாவது நாளில் வைத்து புதிய கதை ஒன்றை கூறியிருக்கிறாரா என்பது போல கூறியிருந்தது. இந்த பதிவை போட்டு விட்டு தனுஷ் மற்றும் வெற்றிமாறனுக்கு அந்த செய்தியை டேக் செய்து இருந்தது ரோகினி திரையரங்கு ட்விட்டர் பக்கம் .
தனுஷ் மற்றும் வெற்றி இருவரும் வடசென்னை 2 படத்திற்காக கட்டாயம் இணைய வாய்ப்பு உண்டு அதனை பற்றி வெற்றிமாறன் தனுசிடம் பேசிக்கொண்டு இருந்தாரா அல்லது புதிய படத்தின் கதையை கூறிகொண்டு இருந்தாரா என்று ரசிகர்கள் கமெண்டுகளில் கூறி வருகின்றனர் .
என்னவாக இருந்தால் என்ன தனுஷ் வெற்றி கூட்டணி ஒன்றே போதும் என்பது தான் பலரின் எதிர்பார்ப்பு .இதுவரை நான்கு படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். நான்கு படங்களும் தமிழ் சினிமாவின் மிக முக்கிய படங்களாகும். இனிமேலும் அதே போல படம் என்றால் கட்டாயம் ரசிகர்கள் மகிழ்ச்சியாகி விடுவார்கள் .
விக்ரம் வேதா இந்தி ரீமேக் இல்லையா? வெப்சீரிஸ் இறங்கும் புஷ்கர் காயத்ரி... ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயின்
தனுஷ் தற்போது நெல்லையில் விறுவிறுப்பாக நடந்து வரும் மாரி செல்லராஜின் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் சூரியை வைத்து இயக்கி வருகிறார். அடுத்தாக சூர்யா கலைப்புலி எஸ்.தாணு மற்றும் ஜீவி கூட்டணியில் விரைவில் இணைய உள்ளார் .