Don't Miss!
- News வரிசையில் நின்று வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி.. ஓட்டு போட்ட பின்னர் வைத்த முக்கிய கோரிக்கை!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரவுடிகளை அனுப்பி நடிகை நிகிதாவை தாக்க முயன்ற மனைவி... மன்னிப்பு கேட்ட தர்ஷன்!
கணவனுடன் கள்ளத் தொடர்பு உள்ளதாக நினைத்து நடிகர் தர்ஷனின் மனைவி ரவுடிகளை அனுப்பி தன்னை மிரட்டியதாகக் குற்றம் சாட்டியுள்ளார் கன்னட - தமிழ் நடிகை நிகிதா.
தமிழில் சக்ரபதி, குறும்பு, சரோஜா, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நிகிதா. கன்னடத்தில் முன்னணி நடிகை.
நிகிதாவுக்கும் கன்னட நடிகர் தர்ஷனுக்கும் இடையே கள்ள தொடர்பு இருப்பதாக, தர்ஷன் மனைவி பகிரங்கமாகக் குற்றம்சாட்டியதும், இதனால் கன்னட தயாரிப்பாளர் சங்கம் நிகிதாவுக்கு படங்களில் நடிக்க தடை விதித்ததும் நினைவிருக்கலாம்.
இந்த பிரச்சினையை ராஜ்குமார் மனைவி பர்வதம்மாள்தான் பஞ்சாயத்துப் பண்ணி தீர்த்து வைத்தார். நிகிதாவிடம் தயாரிப்பாளர் சங்கம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டது.
இந்த சர்ச்சைகளிலிருந்து மீண்டு வந்து படங்களில் பிஸியாகிவிட்டார் நிகிதா. திரும்பவும் கைநிறைய வாய்ப்புகள் வந்துள்ளது குறித்து அவர் கூறுகையில், "கன்னட நடிகர் தர்ஷன் என்னோடு நடித்தபோது, அவருக்கும் அவர் மனைவிக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், எனவே மனைவியை பிரிந்து விட்டதாகவும் கூறினார். மனைவியை விவாகரத்து செய்யப் போவதாகவும் தெரிவித்தார்.
நடிகரின் மனைவி எனக்கும் அவரது கணவருக்கும் தகாத உறவு இருப்பதாக கருதி ரவுடிகளை என் வீட்டுக்கு அனுப்பி மிரட்டினார்.
என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. எதிர்த்து போராடினேன். தற்போது தர்ஷன் என்னிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார். எனக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் படங்களில் நடிப்பது சந்தோஷமாக உள்ளது," என்றார்.