Don't Miss!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- News கடும் வெயில்.. வெப்ப அலை.. வாக்களிக்க போகிறீர்களா? அதிகாரிகள் சொன்ன முக்கிய அறிவுரை!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தடை கேட்ட மனுவைத் தள்ளுபடி செய்த கோர்ட்...சிக்கலின்றி வெளியானது சந்தானத்தின் 'தில்லுக்குத் துட்டு'!
சென்னை: சந்தானத்தின் 'தில்லுக்குத் துட்டு' படத்துக்கு தடை கேட்டுத் தொடர்ந்த மனுவை சிவில் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் படம் தில்லுக்குத் துட்டு. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என ‘பேப்பர் பிளைட் பிக்சர்ஸ்‘ என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.
‘பேப்பர் பிளைட் பிக்சர்ஸ்‘ நிறுவனம் சார்பில் தாக்கல் செயப்பட்ட மனுவில் ''எங்கள் நிறுவனம் ‘ஆவி பறக்க ஒரு கதை‘ என்ற தலைப்பில் திரைப்படம் எடுக்க முடிவு செய்து, பெரும் தொகையை செலவு செய்தது.
இந்த படத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்ட ராம்பாலா என்பவர், இந்த படத்தை எடுப்பதற்கு காலதாமதம் செய்தார். மேலும் இந்த படத்தின் கதையை ‘தில்லுக்கு துட்டு‘ என்ற பெயரில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு, ராம்பாலா இயக்கியுள்ளார்.
இதில் நடிகர் சந்தானம் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வெளியானால், எனக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும். அதனால், படத்தை வெளியிட தடைவிதிக்கவேண்டும்‘' என்று கூறப்பட்டு இருந்தது.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 'தில்லுக்குத் துட்டு' படத்தை இன்று வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்த நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
பேப்பர் பிளைட் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு எதிராக ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ், ராம்பாலா, சந்தானம் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ‘தில்லுக்கு துட்டு‘ படத்துக்கு தடைகேட்டு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனால் எந்த சிக்கலுமின்றி 'தில்லுக்குத் துட்டு' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.